Monday, March 30, 2009

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் டாடா மோட்டார்ஸ் உடன்பாடு

டாடா மோட்டார்ஸின் வாகனங்களுக்கு கடன் கொடுப்பதற்காக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கும் டாடா மோட்டார்ஸூக்குமிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனை டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 1,450 கிளைகளிலும், டாடா மோட்டார்ஸின் 470 விற்பனை நிலையங்களிலும் இந்த வங்கி மூலம் வாடன கடன் பெற முடியும். டாடாவின் மலிவு விலை காரான நானோவை புக் செய்வதற்கும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அங்கீகாரம் பெற்றிருக்கிறது. காரின் விலையில் ( ஆன் ரோடு ) 90 சதவீதம் வரை கடனான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கொடுக்கிறது. அதிக பட்சமாக ஆறு வருடங்கள் வரை திருப்பி செலுத்தும் வசதியுடன் வாகன கடன் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி : தினமலர்


No comments: