Monday, March 30, 2009

கடும் சரிவுடன் முடிந்தது பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை கடும் சரிவுடன் முடிந்திருக்கிறது. கடந்த 5 வர்த்தக நாட்களில் பெற்றிருந்த புள்ளிகளை இன்று இழந்து விட்டது. சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக இந்திய பங்கு சந்தையிலும் இன்று பங்குகளை விற்கும் போக்கு அதிகமாக காணப்பட்டது. சென்செக்ஸ் 9,600 புள்ளிகளுக்கும் கீழேயும், நிப்டி 3,000 புள்ளிகளுக்கும் கீழேயும் சென்று முடிந்திருக்கிறது. பேங்கிங், ரியல் எஸ்டேட், மெட்டல், டெக்னாலஜி, மற்றும் இன்ப்ராஸ்டரச்சர் துறை பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. இன்று நாள் முழுவதும் சரிவுடன் இருந்த மும்பை பங்கு சந்தையில், வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 480.35 புள்ளிகள் ( 4.78 சதவீதம் ) குறைந்து 9,568.14 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையல் நிப்டி 130.50 புள்ளிகள் ( 4.2 சதவீதம் ) குறைந்து 2,978.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பாதிப்படைந்த நிறுவனங்கள் எஸ்.பி.ஐ., ஓ.என்.ஜி.சி., ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, செய்ல், பெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டிஎல்எஃப், ஹெச்டிஎஃப்சி பேங்க், மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவைதான். சன் பார்மா, பிபிசிஎல், என்டிபிசி ஆகிய மூன்று நிறுவன பங்குகள் மட்டுமே விலை உயர்ந்திருந்தது.
நன்றி : தினமலர்


No comments: