ஒரு குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர் மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்., மூலமாக பணம் எடுத்தால் அதற்கு இனிமேல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வருகிற 1ம் தேதி முதல் இந்த சலுகை அமலுக்கு வருகிறது.தற்போது, ஒரு குறிப் பிட்ட வங்கியின் வாடிக் கையாளர், மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்., (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம்) மூலமாக பணம் எடுத்தால் அதற்காக சேவைக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பணப் பரிமாற்றத் துக்கு 20 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனால், சாதாரண மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றொரு வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்தால் அதற்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவை இல்லை. எந்த வங்கியைச் சேர்ந்த வாடிக்கையாளர்களாக இருந்தாலும், நாட்டில் உள்ள பிற வங்கிகளின் ஏ.டி.எம்., மையத்தை பணம் எடுப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம். ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம் (தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள்) அமைப்புகள் உள்ளன. சில வங்கிகள் தங்களுக்குள் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தற்போது அனுமதித்திருக்கிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment