Tuesday, March 17, 2009

டாடாவின் ' நானோ ' காரை வாங்க விண்ணப்ப பாரம் விலை ரூ.300 ?

டாடாவின் ' நானோ ' கார் மிக குறைந்த விலையில் கிடைத்தாலும், அதை வாங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான வேலை இல்லை என்று தெரிகிறது. அதற்காக நாம் அதிகம் செலவிட வேண்டும் போலிருக்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் கார் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உலகின் மிக மலிவு விலை காரான டாடாவின் ' நானோ ' இம்மாதம் 23ம் தேதி விற்பனைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற கார்களைப்போல் நாம் நேராக டீலரிடம் சென்று ' நானோ ' வை வாஙகி விட முடியாது. அதற்காக உள்ள விண்ணப்ப பாரத்தை வாங்கி அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதன் பின்னரே நமது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்று தெரிய வரும். அந்த விண்ணப்ப பாரமும் ரூ.300 கொடுத்து வாங்க வேண்டும் என்று தெரிகிறது. ஒரு வேளை நமது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் ரூ.300 திருப்பி கொடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. முதல் முறையாக கார் கம்பெனி ஒன்று அவர்களது காரை வாங்க விண்ணப்ப பாரம் வினியோகித்து, அதை ரூ.300 க்கு விற்க இருப்பது இது தான் முதன் முறை. நானோ காரை வாங்க அதிக அளவில் டிமாண்ட் இருக்கும் என்று எதிர்பார்ப்பதால் இந்த ஏற்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது என்று டாடா மோட்டார்ஸ் சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ' நானோ ' வைற வாங்க கடன் கொடுப்பதற்காக இதுவரை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் பஞ்சாப் நேஷனல் பேங்க்கும் டாடா மோட்டார்ஸூடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன. விரைவில் பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா ஆகிய வங்கிகளும் இந்த வரிசையில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: