Tuesday, March 17, 2009

வேலையில்லாத வெளிநாட்டினர் வெளியே போங்கள் : ஐரோப்பியர்கள் சொல்கிறார்கள்

வேலையில்லை என்றால் ஏன் இங்கு இருக்கிறீர்கள். உங்கள் நாட்டுக்கு செல்ல வேண்டியதுதானே என்கிறார்கள் என்று வேலையில்லாதவர்களை விரட்டுகிறார்கள் ஐரோப்பியர்கள். சமீபத்தில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கையும் ஹாரீஸ் என்ற நிறுவனமும் இணைந்து எடுத்த ஒரு கருத்து கணிப்பில், ஐரோப்பாவில் உள்ள ஐந்து நாட்டினர், வேலையில்லதா வெளிநாட்டினர் அவர்கள் நாட்டில் இருக்க வேண்டாம் என்ற கருத்தை கொண்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஐரோப்பாவில் 1945 ம் ஆண்டிற்குப்பின் இப்போது ஏற்பட்டிருக்கும் கடும் பொருளாதார சீர்குழைவை அடுத்து, அந்த நாட்டு மக்களிடையே வெளிநாட்டினர் மீது வெறுப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது. பொருளாதார சீர்கேட்டை அடுத்து அந்நாடுகளில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இத்தாலியில் 79 சதவீதத்தினர், இங்கிலாந்தில் 78 சதவீதத்தினர், ஸ்பெயினில் 71 சதவீதத்தினர், ஜெர்மனியில் 67 சதவீதத்தினர், பிரான்சில் 51 சதவீதத்தினர், வேலையில்லாத வெளிநாட்டினர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்கின்றனர்.
நன்றி : தினமலர்


No comments: