Tuesday, March 17, 2009

சரிவுடன் முடிந்தது பங்கு சந்தை

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ஏறி வந்த பங்கு சந்தை இன்று சரிந்தது. இன்று முழுவதும் ஏறியும் இறங்கியும் இருந்த பங்கு சந்தை குறியீட்டு எண், மதியத்திற்கு பின், நிதி, டெக்னாலஜி, ஆயில் அண்ட் கேஸ், மெட்டல் மற்றும் கேப்பிட்டல் குட்ஸ் நிறுவன பங்குகள் அதிக அளவில் விற்கப்பட்டதால் குறைய ஆரம்பித்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 79.72 புள்ளிகள் ( 0.89 சதவீதம் ) குறைந்து 8,863.82 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 19.80 புள்ளிகள் ( 0.71 சதவீதம் ) குறைந்து 2,757.45 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: