Monday, February 23, 2009

பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கையை ஆர்.பி.ஐ.எடுக்கும் : சுப்பாராவ்

இந்திய பொருளாதார நிலையை ரிசர்வ் வங்கி கூர்ந்து கவனித்து வருகிறது. தேவைப்படும் போது வேண்டிய நடவடிக்கையை எடுக்க தயங்காது என்று ஆர்.பி.ஐ.,யின் கவர்னர் சுப்பாராவ் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு சென்று மற்ற நாடுகளின் மத்திய வங்கி தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு வந்த சுப்பா ராவ், நிதி அமைச்சரை சந்தித்து பேசியபோது இவ்வாறு தெரிவித்தார். ஞாயிறு அன்று அவர் நிதி அமைச்சரை சந்தித்து அவரது வெளிநாட்டு பயணம் குறித்தும் இந்திய பொருளாதார நிலை குறித்தும் பேசினார். அப்போது நம்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கையை எடுக்கும் என்றார். வெளிநாடுகளின் பொருளாதார நிலை குறித்தும் அதனை சமாளிக்க அங்குள்ள மத்திய வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். இந்தியாவின் பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் கீழே சென்றிருப்பதால் ரிசர்வ் வங்கி வட்டியை மேலும் குறைக்கலாம் என்று இங்கே உள்ள நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். கடந்த வாரம் டோக்கியோ சென்றிருந்த சுப்பா ராவ் அங்கு பேசியபோதுற, நாங்கள் இன்னும் வட்டியை குறைக்க முடியும். ஆனால் எவ்வளவு குறைப்பது, எப்போது குறைப்பது என்றுதான் தெரியாமல் இருக்கிறது என்றார். இப்போது ரிசர்வ் வங்கியில் ரிபோ ரேட் 5.5 சதவீதமாகவும் ரிவர்ஸ் ரிபோ ரேட் 4.0 சதவீதமாகவும் இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: