Saturday, November 29, 2008

ஒபராய் ஹோட்டல் தாக்குதலில் யெஸ் பேங்க் சேர்மன் கொல்லப்பட்டார்

மும்பை ஒபராய் ஹோட்டலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் யெஸ் பேங்க் சேர்மன் அசோக் கபூர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த புதன் கிழமை அன்று இரவில் மும்பையில் பல இடங்களில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் இரண்டு இடங்கள் பிரபல சொகுசு ஹோட்டல்களான தாஜ் மஹால் பேலஸ் மற்றும் ஓபராய் டிரைடன்ட். தீவிரவாதிகள் நுழைந்த அதே புதன் கிழமை இரவுதான் ஓபராய் ஹோட்டலுக்கு மனைவியுடன் டின்னர் சாப்பிட போயிருந்தார் யெஸ் பேங்க் சேர்மன் அசோக் கபூர். டின்னர் சாப்பிடப்போயிருந்த அசோக் கபூர், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அங்குதான் இருந்திருக்கிறார். அதன் பின்னர் நேற்று மாலை வரை அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. தீவிரடவாதிகளுடன் தாக்குதல் நடத்த ஓபராய் ஹோட்டலுக்குள் நுழைந்திருந்த கமாண்டோ படையினர், ஓபராய் ஹோட்டலில் எல்லா வேலைகளும் முடிந்து என்றும், எல்லோரையும் வெளியேற்றி விட்டேம் என்றும் அறிவித்து விட்டனர். இருந்தாலும் அசோக் கபூர் என்ன ஆனார் என்றும் அவர் உயிருடன் தப்பி விட்டாரா அல்லது இறந்து விட்டாரா என்றும் தெரியாமலேயே இருந்தது. இந்நிலையில் அவர் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அசோக் கபூருடன் சென்றிருந்த அவரது மனைவி மது கபூர் கமாண்டோ படையினரால் காப்பாற்றப்பட்டு விட்டார். ஹோட்டலுக்குள் என்ன நடந்தது என்று சொன்ன மது கபூர், உள்ள நுழைந்த தீவிரவாதிகளில் ஒருவன் எங்களுக்கு மிக அருகிலேயே நின்றுகொண்டிருந்தான். அந்த குழப்பமான சூழ்நிலையில் நாங்கள் சிலர் எப்படியோ அங்கிருந்து நகர்ந்து விட்டோம். பின்னர் ஒரு ஸ்பானிஷ் தம்பதியின் உதவியுடன் நான் ஒரு இடத்தில் பாதுகாப்பாக பதுங்கிக்கொண்டேன். அப்போதுதான் தெரிந்தது, அங்கு என் கணவர் இல்லை என்பது. நானும் எவ்வளவோ தேடிப்பார்த்தேன். அவர் எங்கிருந்தார் என்றே தெரியவில்லை. பின்னர் நான் கமாண்டோ படையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன். அதன்பின் நான் அவரை பார்க்கவே இல்லை என்றார்.
நன்றி : தினமலர்


No comments: