Friday, November 28, 2008

சிறிது உயர்ந்து முடிந்த பங்கு சந்தை

தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களால் நேற்று மூடப்பட்டிருந்த பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் நடந்தது. நவம்பர் மாதத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, வர்த்தகம் ஒன்றும் பிரமாதமாக நடக்கவில்லை. அதற்கு காரணம் நேற்றைக்கு முந்தின நாள் இரவில் துவங்கிய தீவிரவாதிகளின் தாக்குதல் இன்று மாலையில் கூட முடிவுக்கு வராமல் இருந்ததுதான். இன்றைய வர்த்தகத்தில் அதிகம் பங்கேற்றது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி.,பங்குகள்தான். டெக்னாலஜி, தனியார் வங்கிகள், பெல், பார்தி ஏர்டெல், பங்குகளும் கொஞ்சம் வர்த்தகத்தில் கலந்து கொண்டன. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 66 புள்ளிகள் ( 0.73 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 9,092.72 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 2.85 புள்ளிகள் ( 0.10 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 2,755.10 புள்ளிகளில் முடிந்தது. நவம்பர் மாதத்திற்கான வர்த்தகம் நேற்றே முடிந்திருக்க வேண்டும். ஆனால் தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களால் நேற்று பங்கு சந்தை மூடப்பட்டிருந்ததால் இன்று தான் நவம்பர் வர்த்தகம் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: