Tuesday, April 21, 2009

பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் விலை : சன் மைக்ரோசிஸ்டத்தை ஆரக்கிள் வாங்குகிறது

கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சன் மைக்ரோசிஸ்டத்தை, பிரபல கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள் வாங்குகிறது. சன் நிறுவனத்தின் பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிள் வாங்கிக்கொள்கிறது. அதன் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர் ( சுமார் 35,000 கோடி ரூபாய் ) என்று சொல்லப்படுகிறது. கடந்த வெள்ளி அன்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கின் முடிவு விலை என்னவாக இருந்ததோ, அதிலிருந்து 42 சதவீதம் பிரீமியம் வைத்து அதன் பங்குகளை ஆரக்கிள் வாங்கிக் கொள்கிறது. சன் விற்கப்படுவதை அடுத்து நேற்று சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்கு மதிப்பு 27 சதவீதம் உயர்ந்தும், ஆரக்கிளின் பங்கு மதிப்பு 5.56 சதவீதம் குறைந்தும் இருந்தது. ஏற்கனவே, சன் மைக்ரோசிஸ்டத்தின் பங்குகளை பங்கு ஒன்றுக்கு 9.40 டாலர் வரை கொடுத்து வாங்கிக்கொள்வதாக ஐ.பி.எம்.தெரிவித்திருந்தது. இருந்தாலும் ஐ.பி.எம்.மின் கோரிக்கையை சன் நிராகரித்து விட்டது. அதன் பின் ஒரு மாதத்திற்குப்பின் இப்போது பங்குக்கு 9.50 டாலர் என்ற விலையில் ஆரக்கிளுக்கு கொடுக்கு முன் வந்திருக்கிறது. ஆரக்கிளிடம் சன் மைக்ரோசிஸ்டத்தை விற்பதற்கு அதன் போர்டு ஆப் டைரக்டர்கள் அனைவரும் ஒத்துக்கொண்டனர். இருந்தாலும் பங்குதாரர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒப்புதலை பெற்று இது விற்கப்படும் என்று சன் தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: