Wednesday, November 4, 2009

பிரிட்டானியாவின் புதிய பானம்

பிரபல பிரிட்டானியா நிறுவனம், குழந்தைகளுக்கான புதிய பானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பானத்தின் பெயர், 'ஆக்டிவ் மைண்ட்!' இதை, பிரிட்டானியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வினிதா பாலி அறிமுகப்படுத்தி பேசுகையில், 'இந்நாளில், குழந்தைகளுக்கு படிப்புச் சுமையால் அதிக கவனம் தேவைப்படுகிறது. எல்லா குழந்தைகளுக்கும், முழு நினைவாற்றல் இருப்பதில்லை. 'மூளை சுறுசுறுப்படையவும், படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளவும், பால் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த பானம் நிச்சயம் கைகொடுக்கும். மூளைக்குப் புத்துணர்ச்சியும், நினைவாற்றலையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆக்டிவ் மைண்ட், படிக்கும் குழந்தைகளுக்கு முக்கியமான ஒன்று' என்று கூறினார்.புதிய பானம், 180 மில்லி கிராம் கொண்ட பாட்டிலில், மாம்பழம் மற்றும் ஸ்டிராபெரி ஆகிய சுவைகளில், தமிழகம் முழுவதும் கிடைக்கிறது.
நன்றி ; தினமலர்


No comments: