Wednesday, December 3, 2008

ஒரு டிக்கெட்டுக்கு ஒன்று இலவசம் : பாரமவுன்ட் ஏர்வேஸ் அறிவிப்பு

விடுமுறை காலச் சலுகையாக, விமான பயணத்தில், ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட்டை இலவசமாக, தரும் திட்டத்தை, பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மதுரையில் பாரமவுன்ட் ஏர்வேஸ் நிர்வாக, மேலாளர் தியாகராஜன் கூறியதாவது: விடுமுறைக்கால சலுகையாக, ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். எங்கள் விமானத்தில் 'எலைட் பிசினஸ் கிளாஸ்' டிக்கெட் ஒன்று வாங்கும்போது, கூடுதலாக 1500 ரூபாய் செலுத்தி இலவசமாக ஒரு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். வரிகள், சர்சார்ஜ் தனி. அடிக்கடி விமானங்களில், பறப்பவர்களுக்காக 'பாரமவுன்ட் ராயல்' என்ற பெயரில் தனிச்சலுகைகள் வழங்குகிறோம். இதில், உறுப்பினரானால் கோல்ப் கிளப்புகள், ரிசார்ட்டுகள் போன்றவற்றின் சேவைகள் பெற்றுத் தரப்படும். இச்சலுகையை பெற விரும்புவோர் தீதீதீ.ணீச்ணூச்ட்ணிதணtச்டிணூதீச்தூண்.ஞிணிட் என்ற வெப்சைட்டில், பதிவு செய்யலாம். மதுரையில் இருந்து ஒரு நாளைக்கு நான்கு விமானங்களை சென்னைக்கு இயக்குகிறோம். இது தவிர, மதுரையில் இருந்து கோவா, ஆமதாபாத், புனே செல்லவும் தொடர்பு விமான வசதிகளை தருகிறோம். எங்கள் சேவைக்கு போட்டி இருப்பதாக கருதவில்லை. தென்னிந்திய விமான பயணிகளில் 26 சதவீதம் பேர் எங்களது வாடிக்கையாளர்கள். விமான பெட்ரோல் விலை குறைந்துள்ளதால், அதன் பயனை பயணிகளுக்கு தருவது பற்றி பரிசீலிக்கப்படும். மதுரையில் சர்வதேச விமான நிலையம் அமைந்த பிறகு, 2011 முதல் வெளிநாட்டு விமானங்களை இயக்குவோம். இதற்கு எங்களிடம் உள்ள 'எம்பரெர்' ரக விமனங்கள் பொருத்தமாக இருக்கும். மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் விமான பயணிகளின் ஆர்வம் குறைந்துள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் பாதிப்பு இல்லை. இவ்வாறு மேலாளர் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: