Thursday, February 19, 2009

சுகுணா 'டெய்லி பிரஷ்' கிளை துவக்க இளைஞர்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் 150 சுகுணா, 'டெய்லி பிரஷ்' நேரடி விற்பனை நிலையங்களை துவக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிக்கன் கோழி உற்பத்தியில் சிகரத்தை எட்டியுள்ள சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் சார்பில், சுகுணா 'டெய்லி பிரஷ்' என்ற பெயரில் நேரடி விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. கோவை ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டில் முதல் விற்பனை நிலையம் துவக்கப்பட்டது. சென்னை, மதுரை, சேலம், ஈரோடு, புதுச்சேரி உட்பட பல நகரங்களிலும், 'டெய்லி பிரஷ்' கிளைகள் துவக்கப்பட்டன. தற்போது கேரளாவில் அங்கமாலி, திருச்சூர், எர்ணாகுளம், எளமாக்காரா என பல நகரங்களிலும் இதன் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. சுத்தம் செய்யப்படாத சிக்கன்களை வாங்க விரும்பாத சிக்கன் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில், ஏர் கண்டிஷன் செய்யப்பட்ட கடைகளாக இந்த விற்பனை நிலையங்கள் அமைந் துள்ளன. லாலி பப், லெக் பீஸ், கறி கட், முழுக்கோழி என எட்டு விதமான சிக்கன் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அசைவப் பிரியர்களை முழுமையாக திருப்திபடுத்தும் வகையில், ப்ரோசன் சிக்கன், ஹோம் பைட்ஸ் போன்ற உடனடி தயாரிப்பு சிக்கன் வகைகளும் இங்கு உள்ளன. ஒவ்வொரு 'டெய்லிபிரஷ்' கடையிலும் தினமும் 4,000 கிலோ சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக டோர் டெலிவரி வசதியும் துவக்கப்பட்டிருப்பதாக இப்பிரிவின் துணை பொது மேலாளர் பிரியா தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டும் 150 கடைகளைத் திறக்க சுகுணா பவுல்ட்ரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தொழில் செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த கிளைகள் துவக்க முன் வரலாம் என்று இந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: