Thursday, February 19, 2009

தனலட்சுமி வங்கி ஆன்-லைன் சேவை

ரிசர்வ் வங்கியின் 'துரித பணம் அனுப்பும் சேவை திட்டத்தின் கீழ், கேரளாவில் உள்ள திருச்சூரை தலைமையிடமாகக் கொண்ட தனலட்சுமி வங்கி, 'தனம் எக்ஸ்பிரஸ்' என்ற 'ஆன்-லைன்' பணம் அனுப்பும் வசதியை தொடங்கி உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தனலட்சுமி வங்கி, அபுதாபியில் உள்ள மிகப் பெரிய 'ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிவர்த்தனை மையத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அபுதாபியில் உள்ள ஒருவர், இந்தியாவில் எந்த வங்கியின் எந்த கிளைக்கும் உடனுக்குடன் பணம் அனுப்ப முடியும். இந்த வங்கியின் கொச்சியில் உள்ள தொழில் நிதியக் கிளை இதன் ஒரு பிரத்யேக கேந்திரமாக விளங்கும். பிற வங்கியின் வாடிக்கையாளர்கள் (ஆர்.டி.ஜி. எஸ்.,) மற்றும் என்.இ.எப்.டி., மூலம் பணம் அனுப்பி வைக்கப் படும்.
நன்றி : தினமலர்


No comments: