Sunday, February 22, 2009

குக்கிராமங்களில் சேவை வங்கி புது திட்டம்

வங்கியின் கிளை இல்லாத குக்கிராமங்களில் சேவை செய்ய, மின்னணு சாதனங்களின் வசதியுடன் புதிய 'ஸ்மார்ட் கார்டு' திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்த உள்ளது. குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கியில் பணம் போடும் வசதி இல்லை. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்தில் உள்ள கிராமத்தில் வேலை செய்ய தொழிலாளிகள் போகும் போது, அவர்கள் வீட்டுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர். இப்படி குக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு வங்கி சேவை கிடைக்கச் செய்ய ஸ்டேட் பாங்க் புதிய திட்டத்தை கொண்டு வர உள்ளது. வங்கியின் சார்பில், குக்கிராமங்களில், வர்த்தக பிரதிநிதிகள் இருப்பர். அவர்களிடம் மின்னணு சாதனம் தரப்படும். விவசாயிகள், தொழிலாளிகளுக்கு வங்கி தரும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி, இந்த சாதனம் மூலம் தங்கள் குடும்பத்துக்கு உடனுக்குடன் பணம் அனுப்பலாம். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணத்தை தங்கள் வங்கி கணக்கில் போட இந்த மின்னணு சாதனம் உதவுகிறது. கிராமங்களில், கூட்டுறவு சட்டத் தின் படி செயல்படும் கூட்டுறவு சொசைட்டிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் தபால் நிலையங்கள் ஆகியவை வங்கியின் பிரதிநிதியாக செயல்படும். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி கிராமத்தில் உள்ளவர்கள் பணத்தை செலுத்தினால், அதே போல, ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி பணமும் எடுக்கலாம். ஸ்மார்ட் கார்டில் இருந்து வங்கிக்கணக்குக்கு பணத்தை மாற்றும் வசதியையும் வங்கி ஏற்படுத்த உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் கார்டை, ஏ.டி.எம்., கார்டு போலவே பயன்படுத்தலாம். பணத்தை போடுவது, எடுப்பது, கணக்கு விவரம் பெறுவது ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நன்றி : தினமலர்


No comments: