Sunday, October 18, 2009

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிகர லாபம் 29.17% அதிகரிப்பு

டாடா கன்சல்டன்சி சர்வீஸ் (டாடா குரூப் கம்பெனி), இரண்டாம் காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. இதில், அந்நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டை விட 29.17 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டில் 1, 642 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நிறுவனத்தின் வருவாய் இனங்களும் 6.93 சதவீதம் அதிகரித்து 7,435 கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து அந்நிறுவன மேலாண்மை இயக்குனரும் சி.ஈ.ஓ.,வுமான சந்திரசேகரன் தெரிவிக்கும் போது, டாடா கல்சல்டன்சி நிறுவனம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. தொழில்துறையில் மேலும் முன்னேற்றம் அடைய தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இதற்காக எங்களது வாடிக்கையாளர்களிடம் சுமூக உறவினை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


No comments: