Friday, January 15, 2010

தொட​ரும் இன​வெ​றித் தாக்​கு​தல்

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​திய மாண​வர்​கள் மீது நடந்து வரும் இன​வெ​றித் தாக்​கு​தல் கவலை அளிக்​கி​றது.​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக ​ இத்​த​கைய தாக்​கு​தல்​கள் நடந்து வரு​வது கவ​னத்​தில் கொள்​ளத்​தக்​கது.​

க​டந்த ஒரு​வா​ரத்​துக்கு முன்​னர் ஆஸ்​தி​ரே​லி​யா​வின் மெல்​பர்ன் நக​ரில் பஞ்​சா​பைச் சேர்ந்த நிதின் கர்க் என்ற 21 வயது இளை​ஞர் அடை​யா​ளம் தெரி​யாத நபர்​க​ளால் கொடூ​ர​மா​கக் குத்​திக் கொல்​லப்​பட்​டுள்​ளார்.​ இதைத் தொடர்ந்து எரிந்த நிலை​யில் இந்​தி​ய​ரின் உடல் மீட்​கப்​பட்​டுள்​ளது.​ இச் சம்​ப​வங்​கள் பெரும் அதிர்ச்​சியை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளன.​ இந்த அதிர்ச்​சியி​லி​ருந்து நாம் மீள்​வ​தற்​குள் மற்​றொரு இந்​தி​யர் மீது மர்​மக் கும்​பல் ஆசிட் வீச்சு நடத்​தி​விட்டு தப்​பி​யோ​டி​யுள்​ளது.​

மெல்​பர்ன் நக​ரின் வட​மேற்​குப் பகு​தி​யில் வசித்து வரு​ப​வர் ​ ஜஸ்ப்​ரீத் சிங்.​ இந்​தி​ய​ரான இவர்,​​ தனது மனை​வி​யு​டன் ஒரு விருந்​துக்​குச் சென்​று​விட்டு வீடு திரும்​பு​கை​யில் மனை​வியை வீட்​டில் இறக்​கி​விட்டு,​​ காரை பக்​கத்​துத் தெரு​வில் நிறுத்​தி​விட்டு வெளியே வந்​த​போது மர்​மக் கும்​பல் அவரை கீழே தள்ளி அவர் மீது ஆசிட்டை வீசி,​​ தீவைத்​து​விட்​டுத் தப்​பி​யோ​டி​விட்​டது.​

இப்​படி இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தல் அடிக்​கடி நடக்​கின்ற போதி​லும் இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு தீவி​ரப் பிரச்​னை​யாக எடுத்​துக் கொண்​ட​தா​கத் தெரி​ய​வில்லை.​ இந்​தத் தாக்​கு​தலை இன​வெ​றித் தாக்​கு​தல் என்று சொல்​ல​மு​டி​யா​விட்​டா​லும்,​​ கடந்த ஓராண்​டுக்கு மேலாக இந்​தி​யர்​களை மட்​டும் குறி​வைத்து நடத்​தப்​ப​டும் தாக்​கு​தல்​க​ளைப் பார்த்​தால் இது இன​வெறி ஆதிக்​கச் செயலே என்​பது தெரி​ய​வ​ரும்.​

இந்​தத் தாக்​கு​தல் சம்​ப​வங்​கள் சாதா​ரண குற்​றச் சம்​ப​வங்​கள்​தான் என்​பது போல் ஆஸ்​தி​ரே​லி​யத் தூதர் தாமஸ் வர்​கீஸ் பேசி​யுள்​ளார்.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் மேற்​ப​டிப்​புக்கு விண்​ணப்​பிக்​கும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறைந்து வரு​வ​தற்கு சர்​வ​தேச அள​வில் ஏற்​பட்​டுள்ள பொரு​ளா​தா​ரச் சரிவே கார​ணம் என்​றும் அவர் கூறி​யுள்​ளார்.​ ஆனால்,​​ ஊட​கங்​கள் மூலம் கிடைக்​கும் தக​வல்​க​ளைப் பார்த்​தால் பாது​காப்பு இல்​லாத கார​ணத்​தால்​தான் இந்த எண்​ணிக்கை குறைந்து வரு​வது புரி​யும்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் ஆசி​யர் அல்​லா​த​வர்​க​ளின் எண்​ணிக்​கை​யு​டன் ஒப்​பிட்​டால் அங்கு படித்து வரும் இந்​தி​யர்​க​ளின் எண்​ணிக்கை குறை​வு​தான்.​ ஆனால்,​​ ஆசி​யர்​கள் எண்​ணிக்​கை​யில் இந்​தியா இரண்​டா​வது இடம் வகிக்​கி​றது.​ ஆஸ்​தி​ரே​லி​யா​வில் பட்​ட​மேற்​ப​டிப்பு படிக்​கும் மாண​வர்​கள்,​​ பகு​தி​நேர ஊழி​யர்​க​ளாக வேலை​செய்து தங்​கள் செல​வி​னங்​க​ளைச் சமா​ளித்து வரு​கின்​ற​னர்.​ குறிப்​பாக மெல்​பர்ன் நக​ரில் இந்​தி​யர்​கள் எங்கு சென்​றா​லும் குழு​வா​கவே செல்​கின்​ற​னர்.​ தனி​யா​கச் செல்​வ​தில்லை.​ மேலும் விலை​ம​திப்பு மிக்க பொருள்​கள் எதை​யும் அவர்​கள் கையி​லெ​டுத்​துச் செல்​வ​தில்லை.​ இந்​நி​லை​யில் இது​போன்று நடத்​தப்​ப​டும் தாக்​கு​தலை வழிப்​பறி என்ற சாதா​ரண குற்​ற​மாக யாரும் சொல்​லி​விட முடி​யாது.​

இந்​தி​யர்​கள் மீது குறிப்​பாக மாண​வர்​கள் மீது நடத்​தப்​பட்டு வரும் கொலை​வெ​றித் தாக்​கு​த​லுக்கு இந்​தியா ​ கடும் கண்​ட​னம் தெரி​வித்​துள்​ளதை ஆஸ்​தி​ரே​லிய அர​சால் தாங்​கிக் கொள்ள முடி​ய​வில்லை.​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தா​கக் கூறு​வ​தற்​குப் பதி​லாக உல​கம் எங்​கும் இது​போன்ற குற்​றங்​கள் நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ ஏன் தில்லி,​​ மும்பை போன்ற நக​ரங்​க​ளி​லும் இவை நடக்​கத்​தான் செய்​கின்​றன.​ எனவே இதைப் பெரி​து​ப​டுத்த வேண்​டாம் என்று அந்த நாட்​டின் வெளி​யு​றவு அமைச்​சர் பேசி​யுள்​ளது அவ​ரது பொறுப்​பற்ற தன்​மை​யையே காட்​டு​கி​றது.​

இத்​த​கைய சம்​ப​வங்​கள் தற்​செ​ய​லாக நடந்​தி​ருந்​தா​லும் சரி...இன​வெ​றித் தாக்​கு​த​லாக இருந்​தா​லும் சரி...​ வெளி​நாட்​டி​னரை,​​ குறிப்​பாக இந்​தி​யர்​க​ளைப் பாது​காக்​கும் பொறுப்பு ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு உள்​ளது.​

இந்​தி​யர்​கள் மீது இன​வெ​றித் தாக்​கு​தல் நடந்து வரும் நிலை​யில்,​​ மத்​திய வெளி​யு​றவு அமைச்​சர் எஸ்.எம்.கிருஷ்ணா,​​ "ஆஸ்​தி​ரே​லி​யா​வுக்கு படிக்​கச் செல்​லும் மாண​வர்​கள் ஒரு​மு​றைக்கு இரு​முறை யோசித்​துப் படிக்​கச் செல்​ல​வேண்​டும்.​ இன்​னும் சொல்​லப்​போ​னால் ஆஸ்​தி​ரே​லியா சென்று படிப்​ப​தைத் தவிர்க்க வேண்​டும்.​ வேறு​நா​டு​க​ளில் உள்ள பட்ட மேற்​ப​டிப்​பு​க​ளைத் தேர்ந்​தெ​டுத்​துப் படிக்​க​லாம்' என்​றும் யோசனை கூறி​யி​ருக்​கி​றார்.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் இந்​தி​யர்​கள் மீதான தாக்​கு​தலை உட​ன​டி​யாக நிறுத்த அந்த நாட்டு அர​சு​டன் பேச்சு நடத்தி சுமு​கத் தீர்​வு​காண முன்​வ​ரா​மல்,​​ மாண​வர்​களை அங்கு சென்று படிக்க வேண்​டாம் என்று கூறு​வது புத்​தி​சா​லித்​த​னம் அல்ல.​ ஆஸ்​தி​ரே​லிய பல்​க​லைக்​க​ழ​கங்​க​ளில் பட்​ட​மேற்​ப​டிப்​புக் கல்வி நன்​றாக இருப்​ப​தால்​தான் அங்கு சேர்​வ​தில் மாண​வர்​கள் ஆர்​வம் காட்​டு​கின்​ற​னர்.​ மேலும் திற​மை​யுள்ள மாண​வர்​க​ளும்,​​ அதிக மதிப்​பெண் பெறும் வாய்ப்​புள்ள,​​ வன்​மு​றைச் செயல்​க​ளில் ஈடு​ப​டாத மாண​வர்​கள்​தான் அங்கு செல்​கின்​ற​னர்.​ எங்கு சென்று படிக்க வேண்​டும்,​​ என்ன படிப்பு படிக்க வேண்​டும் என்​ப​தைத் தீர்​மா​னிக்க வேண்​டி​யது மாண​வ​ரும் அவ​ரு​டைய பெற்​றோ​ரும் தான்.​ கல்வி ஆலோ​ச​கர்​க​ளா​கச் செயல்​ப​டும் சில​ரு​டைய தவ​றான வழி​காட்​டு​தல்​க​ளாலே தவ​று​கள் ஏற்​ப​டு​கின்​றன.​ வெளி​நாடு சென்று படிக்​கும் மாண​வர்​க​ளுக்​குச் சில எச்​ச​ரிக்​கை​களை அமைச்​சர் தெரி​விக்​க​லாமே தவிர அவர்​களை இங்கு படிக்​காதே,​​ அங்கு படிக்​காதே என்று தீர்ப்​புச் சொல்​லக்​கூ​டாது.​

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் படிக்​கும் இந்​திய மாண​வர்​கள்,​​ தங்​க​ளின் திற​மை​யான படிப்​பின் மூல​மும்,​​ செயல்​பாட்​டின் மூல​மும் அந்த நாட்​டுக்​குப் பெருமை தேடித் தரு​கின்​ற​னர்.​

இதை ஆஸ்​தி​ரே​லிய அரசு உணர்ந்​து​கொண்டு நடந்த சம்​ப​வத்​துக்கு வருத்​தம் தெரி​விப்​ப​து​டன் நில்​லா​மல்,​​ இந்​தி​யர்​க​ளின் பாது​காப்​பில் கவ​னம் செலுத்த வேண்​டும்.​ அது​மட்​டு​மல்ல,​​ இது​போன்ற இன​வெ​றித் தாக்​கு​த​லுக்கு முற்​றுப்​புள்ளி வைப்​ப​து​டன் இதற்​குக் கார​ண​மான குற்​ற​வா​ளி​க​ளைக் கண்​டு​பி​டித்து நட​வ​டிக்கை எடுக்க வேண்​டும்.​

அன்​னிய நாட்​டில் இந்​தி​யர்​க​ளின் விலை​ம​திக்க முடி​யாத உயிர் பறி​போ​வதை பார்த்​துக்​கொண்டு நாம் சும்மா இருக்க முடி​யாது.​ இந்​திய மாண​வர்​க​ளின் பாது​காப்பை உறுதி செய்​வ​தில் ஆஸ்​தி​ரே​லிய அர​சுக்கு முழு பொறுப்பு உள்​ளது.​ அதை வலி​யு​றுத்​தும் கடமை இந்​திய அர​சுக்கு உள்​ளது.
கட்டுரையாளர் :ஜெ.ராக​வன்
நன்றி : தினமணி

No comments: