Saturday, June 27, 2009

ஜாகுவார், லேண்ட்ரோவரால் டாடா மோட்டார்ஸூக்கு நஷ்டம் ரூ.2,505 கோடி

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ், 2008 - 09 நிதி ஆண்டில் ரூ.2,505 கோடி நிகர நஷ்டம் அடைந்திருக்கிறது. இங்கிலாந்தின் சொகுசு கார் கம்பெனிகளான ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரை கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 2.5 பில்லியன் டாலருக்கு டாடா மோட்டார்ஸ் வாங்கியதை அடுத்து, இந்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஜாகுவார், லேண்ட்ரோவர் நிறுவனங்களால் மட்டும் டாடா மோட்டார்ஸூக்கு ரூ.1,777 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. டாடா மோட்டார்ஸின் கைக்கு ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் வந்ததற்கு பின், அந்த இரு கார்களின் வருடாந்தர விற்பனை 32 சதவீதம் குறைந்து 1.67 லட்சமாகி இருக்கிறது. லேண்ட் ரோவரின் விற்பனை 1.98 லட்சத்தில் இருந்து 1.2 லட்சமாகவும், ஜாகுவாரின் விற்பனை 1,000 கார்கள் குறைந்து 47,000 ஆகவும் ஆகி விட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த டாடா மோட்டார்ஸ் வைஸ் சேர்மன் ரவி காந்த், கடந்த நிதி ஆண்டில் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவரின் விற்பனை வட அமெரிக்காவில் 37 சதவீதமும் இங்கிலாந்தில் 31 சதவீதமும் குறைந்திருந்தது என்றார். ஆனால் இப்போது, அங்கு நிலைமை மாறி வருகிறது. விற்பனை அதிகரித்து வருகிறது என்றார்.
நன்றி : தினமலர்


No comments: