Friday, June 26, 2009

ஏறியது பங்கு சந்தை

ஜூலை சீரியஸின் முதல் நாளான இன்று, பங்கு சந்தை ஏற்றத்துடன் முடிந்திருக்கிறது. கேப்பிட்டல் குட்ஸ், பேங்கிங், ஆயில் அண்ட் கேஸ், டெக்னாலஜி மற்றும் ரியஸ் எஸ்டேட் பங்குகளின் வளர்ச்சியால் சந்தை குறியீட்டு எண்களான நிப்டி 4350 புள்ளிகளுக்கு மேலும், சென்செக்ஸ் 14700 புள்ளிகளுக்கு மேலும் உயர்ந்து முடிந்திருக்கிறது. கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஓ என் ஜி சி, எல் அண்ட் டி, இன்போசிஸ், பெல், டிசிஎஸ், பார்தி, எஸ்பிஐ, ஸ்டெர்லைட், செய்ல், ஹெச்டிஎப்சி,மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டதால், சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. இருந்தாலும் சன் பார்மா, ரான்பாக்ஸி லேப், ஹீரோ ஹோண்டா, எம் அண்ட் எம், மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சன் பார்மா வின் பங்கு மதிப்பு இன்று 11.5 சதவீதத்திற்கு மேல் குறைந்திருந்தது. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 419.02 புள்ளிகள் ( 2.92 சதவீதம் ) உயர்ந்து 14,764.64 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 133.65 புள்ளிகள் ( 3.15 சதவீதம் ) உயர்ந்து 4,375.50 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.

நன்றி : தினமலர்



No comments: