Tuesday, June 23, 2009

சுவிஸ் வங்கியின் சேமிப்பு குறித்த விபரத்தை அளிக்க சுவிஸ் அரசு சம்மதம்

வரி கட்டுவதில் இருந்து தப்புவதற்காக சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் ( கருப்பு பணம் ) குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று சுவிஸ் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. போதைப்பொருள் விற்பனை அல்லது லஞ்சம் மூலம் பெற்ற பணம் ஆகிய இரண்டு வகையான பணத்தை மட்டுமே சுவிஸ் வங்கி இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இருந்தது. இந்த இரு வகையில் இல்லாமல் மற்ற எந்த வகையில் ஒருவர் பணம் சம்பாதித் திருந்தாலும் அவரது பணத்தை சுவிஸ் வங்கிகள் பெற்றுக்கொள்ளும். அது சம்பந்தமான விபரங்களை யாருக்கும் சொல்லாமல் ரகசியம் காக்கும். ஆனால் உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்கள், வருமான வரித்துறைக்கு காட்டாமல் சம்பாதிக்கும் கருப்பு பணத்தையும் சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்க துவங்கினர். இதனால் அவர்கள் அந்தந்த நாட்டில் வரி கட்டுவதில் இருந்து தப்பித்து வந்தனர். இவ்வாறு வரி கட்டுவதில் இருந்து தப்பித்த இந்தியர் களின் பணமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் சேமிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கருப்பு பணம் யார் யார் பெயரில் எவ்வளவு தொகை சேமிக்கப்பட்டிருக்கிறது என்ற விபரம் நமக்கு தெரிவதில்லை. இதனை போக்கும் விதமாக இந்திய அரசு, சுவிட்சர்லாந்து அரசுடன் தொடர்பு கொண்டு, டபுள் டேக்ஷேசன் ஆவாய்டன்ஸ் அக்ரீமென்ட் ( டிடிஏஏ ) படி, வரி கட்டுவதில் இருந்து தப்புவதற்காக சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் குறித்த விபரத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனை பரிசீலித்த சுவிட்சர்லாந்து அரசு, இந்திய அரசு கேட்டுக்கொண்டால் அந்த விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: