Wednesday, June 17, 2009

பங்கு சந்தையில் 435 புள்ளிகள் சரிவு

பங்கு சந்தை இன்றும் சரிவில் முடிந்திருக்கிறது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே குறைந்திருந்த சந்தை குறியீட்டு எண்கள், மாலை வர்த்தக முடிவு வரை நீடித்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 435.07 புள்ளிகள் ( 2.91 சதவீதம் ) குறைந்து 14,522.84 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 161.65 புள்ளிகள் ( 3.58 சதவீதம் ) குறைந்து 4,356.15 புள்ளிகளில் முடிந்திருக் கிறது. கடந்த மூன்று நாட்களாகவே நிறுவன முதலீட்டாளர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாகவும் ஐரோப்பிய சந்தைகளில் ஒரு சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாலும் இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன என்றும் சொல்கிறார்கள்.
நன்றி : தினமலர்


1 comment:

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்