Friday, June 12, 2009

பன்றி காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து : ஸ்விஸ் கம்பெனி நோவார்டிஸ் தயாரித்தது

உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் பன்றி காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து ஒன்றை சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல மருந்து நிறுவனமான நோவார்டிஸ் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த மருந்து, செல்களில் இருந்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் அந்த மருந்து இன்னும் சோதனை அடிப்படையில்தான் இருக்கிறதாம். உலகம் முழுவதும் இது ஒழிக்கப்பட வேண்டிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்ததற்கு பின்னர்தான், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நோவார்டிஸ் வெளியே சொல்லியிருக்கிறது.
நன்றி: தினமலர்


No comments: