Wednesday, June 24, 2009

மகிந்திரா சத்யத்திற்கு புது சி.இ.ஓ.,வாக குர்னானி நியமனம்

மகிந்திரா சத்யம் என்று பெயர் மாற்றம் செய்ப்பட்டுள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கு புதிய சி.இ.ஒ.,வாக சி.பி.குர்னானி நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக சஞ்சய் கர்லா என்பவர் டெக் மகிந்திராவின் சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதே போல் மகிந்திரா சத்யத்தின் புதிய சி.எஃப்.ஓ.,வாக சுப்ரமணியம் துர்கா சங்கரும், டெக் மகிந்திரா மற்றும் மகிந்திரா சத்யத்தில் வைஸ் பிரசிடென்ட் ஆக வினீத் நய்யாரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே மகிந்திரா சத்யத்தில் இடைக்கால சி.இ.ஓ.வாக இருந்த ஏ.எஸ் மூர்த்தி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் குர்னானி நியமிக்கப்பட்டிருக்கிறார். குர்னானி இதற்கு முன் டெக் மகிந்திராவின் சர்வதேச நடவடிக்கைகளின் தலைவராக இருந்தவர். ஆனால் ஏ.எஸ்.மூர்த்தி தொடர்ந்து மகிந்திரா சத்யத்தில்தான் இருப்பார். துர்காசங்கர் இதற்கு முன் மகிந்திரா அண்ட் மகிந்திராவின் எம் அண்ட் ஏ பிரிவில் சீனியர் வைஸ் பிரசிடென்ட் ஆக இருந்தார். நிர்வாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாற்றங்கள் நேற்று செவ்வாய் கிழமையில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: