Saturday, April 18, 2009

விவசாய கடன்களுக்கான வட்டி குறைப்பு செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்தது எஸ்.பி.ஐ.

வேர்ஹவுஸ் மற்றும் கோல்ட்ஸ்டோரேஜ் களில் சேமிக்கப்படும் விவசாயப்பொருட்கள் மீது கொடுக்கப் படும் கடன்களுக்கான குறைந்த சதவீத வட்டி திட்டத்தை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வரும் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்திருக்கிறது. வீட்டு கடனுக்கு 8 சதவீத வட்டி, கார் கடனுக்கு 10 சதவீத வட்டி என்று அதிரடி வட்டி குறைப்பு திட்டத்தை அறிவித்த இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வேர்ஹவுஸ் மற்றும் கோல்ட்ஸ்டோரேஜ்களில் சேமித்து வைக்கும் விவசாய பொருட்கள் மீது கொடுக்கப்படும் கடனுக்கும் 8 சதவீதம் தான் வட்டி என்று கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்திருந்தது. இந்த திட்டம் ஏப்ரல் மாதம் வரை மட்டும்தான் என்று ஏற்கனவே சொல்லியிருந்தது. ஆனால் இந்த திட்டத்திற்கு கிடைத்திருக்கும் அதிகப்படியான வரவேற்பை அடுத்து, இந்த திட்டம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இன்று அறிவித்திருக்கிறது. ஒரு வருட காலத்திற்கு மட்டும் கொடுக்கப்படும் இவ்வகை கடனுக்கு ஸ்டேட் பேங்க், 8 சதவீதம் மட்டும் வட்டியை வசூலித்துக்கொள்கிறது.
நன்றி : தினமலர்


No comments: