Saturday, April 18, 2009

இரண்டு வருடங்களில் முதல் முறையாக லாபம் சம்பாதித்த சிட்டி பேங்க்

அமெரிக்காவை வாட்டி எடுத்த சப்பிரைம் மார்ட்கேஜ் லோன் திட்டத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது அங்குள்ள சிட்டி பேங்க் தான். பல இன்னல்களை சந்தித்து வந்த அந்த வங்கியில் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நஷ்டம்தான் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலையை இழந்ததுடன் அதன் நிர்வாக மட்டத்திலும் பல மாறுதல்களை சந்தித்தது. இப்போது அமெரிக்க அரசாங்கத்தின் நிதி உதவியால் ( அமெரிக்க அரசாங்கத்திற்கு சிட்டி பேங்கில் 40 சதவீத பங்குகள் இருக்கின்றன ) நடந்து கொண்டிருக்கும் அந்த வங்கி, இந்த வருடத்தின் முதல் மூன்று மாத காலத்தில் முதன் முதலாக லாபம் சம்பாதித்திருக்கிறது. கடந்த வருட முதல் மூன்று மாத காலத்தில் 5.1 பில்லியன் டாலர் ( சுமார் 25,500 கோடி ரூபாய் ) நஷ்டம் அடைந்திருந்த அந்த வங்கி, இந்த வருட முதல் மூன்று மாத காலத்தில் 1.6 பில்லியன் டாலர் ( சுமார் 8,000 கோடி ரூபாய் ) லாபம் ஈட்டியிருக்கிறது. அதன் மொத்த வருவாயும் கடந்த வருடத்தை விட 99 சதவீதம் உயர்ந்து 24.8 பில்லியன் டாலர் வந்திருக்கிறது. 2007 இரண்டாவது காலாண்டிற்குப்பின் இப்போது தான் நல்ல லாபம் சம்பாதித்திருக்கிறோம் என்றார் சிட்டி பேங்க்கின் தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியரான விக்ரம் பண்டிட்.
நன்றி : தினமலர்


No comments: