Saturday, April 18, 2009

சிறப்பு பொருளாதார திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்வதாக டி.எல்.எஃப்.அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான டி.எல்.எஃப்., அது உருவாக்கி கொடுக்க ஒத்துக்கொண்ட, ஐ.டி.மற்றும் ஐ.டி.சார்ந்த நிறுவனங்களுக்கான நான்கு சிறப்பு பொருளாதார திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. சோனாப்பூர், காந்தி நகர், புவனேஷ்வர் மற்றும் கோல்கட்டாவில் அது உருவாக்கி தர ஒப்புக்கொண்ட சிறப்பு பொருளாதார திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. இது குறித்து மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தை அணுகியிருக்கும் டி.எல்.எப். நிறுவனம், தாங்கள் அந்த திட்ட பணியில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாகவும் அதற்கான அனுமதியை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறது. வர்த்தக அமைச்சகம் தான் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி அளிக்கும். இன்றைய சூழ்நிலையில், ஐ.டி.மற்றும் ஐ.டி.தொடர்பான தொழில் பாதிக்கப்பட்டிருப்பதால், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இடங்களை பிடிப்பதற்கு டிமாண்ட் இருக்காது என்று டி.எல்.எஃப்., கருதுகிறது. எனவேதான் அது இந்த திட்ட பணிகளில் இருந்து விலகிக்கொள்ள விரும்புவதாக சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


No comments: