Friday, April 3, 2009

எலிசபெத் ராணிக்கு ' ஐபாட் ' பரிசளித்த பாரக் ஒபாமா தம்பதி

லண்டனில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் அவர் மனைவி மிச்சலும், இங்கிலாந்து ராணி எலிசபெத்தை, பக்கிங்ஹாம் அரண்மணைக்கு சென்று சந்தித்தனர். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மிச்சலும், ராணி எலிசபெத்துக்கு ஒரு ' ஐபாட் ' ஐ பரிசளித்தனர். அதில், ராணி எலிசபெத் 2007ம் வருடம் அமெரிக்கா சென்றிருந்தபோது, வாஷிங்டன் மற்றும் விர்ஜினியா வுக்கு போனபோது எடுத்த வீடியோ படம் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் ரிச்சர்ட் ரோட்கர்ஸ் என்ற புகழ்பெற்ற இசையமைப்பாளர் கையெழுத்து போட்டிருந்த அரிய பாட்டு புத்தகம் ஒன்றையும் ராணிக்கு பரிசளித்தனர். பதிலுக்கு ராணியும் அவர் கணவர் பிலிப்பும், அவர்கள் இருவரும் இருக்கும் போட்டோ ஒன்றில் கையெழுத்து போட்டு, அதை ஒபாமா மற்றும் மிச்சலுக்கு பரிசளித்தனர்.
நன்றி : தினமலர்


No comments: