Friday, August 14, 2009

மலேசியாவில் வேலைக்கு சேர இந்திய சமையல்காரர்களுக்கு கிடுகிப்பிடி

மலேசிய உணவகங்களில் சமையல் வேலை செய்ய இந்தியாவில் இருந்து அதிகமானோர் படையெடுத்துக் கொண்டிருந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து விட்டது மலேசிய உணவகங்கள், இனிமேல் சொந்த நாட்டில் இருப்பவர்களுக்கே சமையல் வேலையை அளிக்க தீர்மானித்துள்ளது. மலேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் எஸ் சுப்பிரமணியம் , மலேசிய உணவகங்களில் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை நியமிப்பதை தவிர்த்து உள்ளூர் வாசிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக மலேசிய அரசே கேட்டரிங் இன்ஸ்ட்டியூட் ஒன்றை நிறுவியுள்ளது. மேலும் கல்விக் கட்டணத்திலும் மலேசிய அரசு சலுகைகள் அறிவித்துள்ளது. அந்நாட்டு இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக மலேசிய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் எஸ் சுப்பிரமணியம் கூறினார். இதே போல் முடித்திருத்தகங்களிலும் இந்தியாவில் இருந்து ஆட்களை பணியமர்த்துவது குறித்து மறு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டங்கள் இரண்டும், மலேசிய பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.
நன்றி : தினமலர்


No comments: