கார்ப்பரேட் லோன்களில் கவனம் செலுத்துகிறது எச்.எஸ்.பி.சி., வங்கி. எச்.எஸ்.பி.சி., நிறுவனம் தனது பிசினசை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் லோன்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்ட கடன் 8 சதவீதம் குறைந்ததன் எதிரொலியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எச்.எஸ்.பி.சி., பொது மேலாளர் நைநா லால் கிட்வாய் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ரிசர்வ் வங்கியடம் இருந்து கவுகாத்தி, சூரத், நாசிக் ஆகிய பகுதிகளில் வங்கிகள் அமைக்க அனுமதி பெற்றுள்ளது. எனவே பரவலாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான லோன் வழங்கும் திட்டம் நல்ல ஆதரவை பெறும் என எச்.எஸ்.பி.சி., உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment