Thursday, March 26, 2009

ரஷ்ய நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்குகிறது டாடா டீ

ரஷ்ய நிறுவனம் ஒன்றின் 51 சதவீத பங்குகளை டாடா டீ நிறுவனமும், இ.பி.ஆர்.டி.என்ற ஐரோப்பிய வங்கியும் சேர்ந்து வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. கிராண்ட் என்ற அந்த ரஷ்ய நிறுவனம், பேக்கிங் மற்றும் டிஸ்ட்ரிபூஷன் தொழில் செய்து வருகிறது. டாடா டீ யின் ஐரோப்பிய துணை நிறுவனம் ஒன்று இதற்கான வேலையில் இறங்கியிருக்கிறது. கிராண்ட் நிறுவனத்தில் ஏற்கனவே டாடா டீ க்கு 33.2 சதவீத பங்குகளும், இ.பி.ஆர்.டி.,க்கு 17.8 சதவீத பங்குகளும் இருக்கின்றன. மீதி 49 சதவீத பங்குகள் கிராண்ட் நிறுவனத்தின் புரமோட்டர்களிடம் இருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: