
''நாடு முழுவதும் மகளிர் குழுவினருக்கு 1,400 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள் ளது,'' என, இந்தியன் வங்கி தலைவர் சுந்தரராஜன் தெரிவித்தார். இந்தியன் வங்கி தலைவரும், நிர்வாக இயக்குனருமான சுந்தரராஜன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியன் வங்கி சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க நாடு முழுவதும் 17 சிறப்பு கிளைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஆறாவது கிளையாக சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இந்த குழுக்களுக்கு 1,400 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 700 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், 99 சதவீத குழுக்கள் தாமாகவே முன்வந்து கடன் தொகையை கட்டுகின்றன. வராக்கடனாக 460 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இவ்வாறு சுந்தரராஜன் கூறினார்.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment