
மார்ச் 14 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 0.27 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது, அதற்கு முந்தைய வாரத்தில் 0.44 சதவீதமாக இருந்தது. இது கடந்த 30 வருடங்களில் இல்லாத குறைந்த அளவு. இதே வேகத்தில் சென்றால் விரைவில் பணவீக்கம் 0.0 சதவீதமாகி விடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பார்லி போன்ற உணவுப்பொருட்களின் விலை 0.1 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. உணவுப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதால் சில உற்பத்தி பொருட்களும் விலையும் உயர்ந்திருக்கிறது. இருந்தும் கூட பணவீக்கம் குறைந்திருக்கிறது. பணவீக்கம் மேலும் குறைந்திருப்பதை அடுத்து பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி, நிதி கொள்கையில் மாற்றம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி : தினமலர்
1 comment:
நன் உங்க பதிவ படிச்சேன் அருமை வோட்டும் போட்டாச்சு
என்னோட பதிவும் படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க
http://sureshstories.blogspot.com/
Post a Comment