Thursday, March 26, 2009

மீண்டும் சென்செக்ஸ் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்றது

50 வர்த்தக நாட்களுக்குப்பின் மீண்டும் சென்செக்ஸ் 10,000 புள்ளிகளை தாண்டி வந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயர்ந்து கொண்டிருந்த குறியீட்டு எண் சென்செக்ஸ் மதியம் 3 மணி அளவில் 10,000 புள்ளிகளை தாண்டியது. பின்னர் அது கொஞ்சம் குறைந்தாலும் மீண்டும் 10,000 புள்ளிகளை அடைந்து விட்டது. தேசிய பங்கு சந்தையிலும் நிப்டி 3,100 புள்ளிகள் வரை வந்து பின்னர் கடைசி 10 நிமிட வர்த்தகத்தின் போது கொஞ்சம் குறைந்து விட்டது.எனினும் 3,100 புள்ளிகளை ஒட்டியே இருக்கிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள இன்று பெருமளவில் வர்த்தகத்தில் கலந்து கொண்டதால் குறியீட்டு எண்கள் இந்தளவுக்கு உயர்ந்திருக்கின்றன. இன்ஃப்ராஸ்டரச்சர், மெட்டல், பேங்கிங், டெக்னாலஜி, ஆட்டோ, எஃப் எம் ஜி சி, மற்றும் ஆயில் அண்ட் கேஸ் நிறுவன பங்குகள் அதிக அளவில் வாங்கப்பட்டதால், சந்தை நாள் முழுவதும் ஏற்ற நிலையிலேயே இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் ஓ.என்.ஜி.சி.,பார்தி ஏர்டெல், பெல், டி சி எஸ், எல் அண்ட் டி, விப்ரோ, ஸ்டெர்லைட், மாருதி, மற்றும் டாடா பவர் நிறுவன பங்குகள் 5 - 6 சதவீதம் விலை உயர்ந்திருந்தன. எஸ்.பி.ஐ, ஐ.டி.சி, இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், என் டி பி சி, ஹெச் டி எஃப் சி, ஹெச் யு எல், ஐசிஐசிஐ பேங்க், மற்றும் ஹெச் டி எஃப் சி பேங்க் பங்குகள் 2 - 4 சதவீதம் விலை உயர்ந்திருந்தன. இன்று எஃப் அண்ட் ஓ வின் முடிவு நாளானதால், இந்த வாரத்தில் இன்று தான் அதிக வர்த்தகம் நடந்துள்ளது. இன்று மட்டும் மொத்தம் ரூ.97,107.51 கோடி க்கு வர்த்தகம் நடந்திருக்கிறது. இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 335.20 புள்ளிகள் ( 3.47 சதவீதம் ) உயர்ந்து 10,003.10 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 97.90 புள்ளிகள் ( 3.28 சதவீதம் ) உயர்ந்து 3,082.25 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. இன்று அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளிலும் ஏற்ற நிலையே காணப்பட்டது.
நன்றி : தினமலர்


No comments: