Thursday, August 7, 2008

விபத்து ஏற்படுத்தாத கார் நிசான் நிறுவனம் வடிவமைப்பு


எதன் மீதும் மோதாத காரை, நிசான் மோட்டார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. அடுத்த ஆண்டு இந்த கார்கள் விற்பனைக்கு வருகின்றன. ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனம், எதன் மீதும் மோதாத பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் எரிபொருளை மிகவும் குறைவாக பயன்படுத்தும் வகையில் புதிய காரை வடிவமைத்துள்ளது. பாதுகாப்பு அம்சங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதால், 1995ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டுக்குள் நிசான் நிறுவனங்களின் கார்கள் விபத்துக்குள்ளாவதை பாதியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, முன்புறம், பக்கவாட்டுப்பகுதி, பின்புறங்களில் சென்சார்களுடன் புதிய கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தூர இடைவெளியில் கார்கள் அல்லது சுவர்கள் தென்பட்டால், சென்சார்கள் எச்சரிக்கை மணி எழுப்புவதோடு, ஆக்சிலேட்டரை குறைத்து, வாகனத்தை நிறுத்திவிடும். குறிப்பிட்ட இடைவெளியில் வாகனத்தை செலுத்தும் வகையிலும், லேன் மாறாதவகையில் வாகனத்தை இயக்கும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வேகத்தை தாண்டும் போது, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், காஸ் மூலம் இயங்கும் தானியங்கி கருவி, ஆக்சிலேட்டர் பெடலை முன் நோக்கி அழுத்தும். இதன்மூலம், எரிபொருள் சிக்கனமாவதோடு, விபத்தே ஏற்படாத கார்கள் பயன்பாட்டுக்கு வரும். அடுத்த ஆண்டு முதல் இந்த கார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.
நன்றி : தினமலர்


1 comment:

கோவை விஜய் said...

விபத்தில்லாப் பெரு வாழ்வா?