Wednesday, August 6, 2008

லட்சம் வீட்டுக்கடனுக்கு வட்டியுடன் கட்டும் தொகை ரூ.1கோடி: மலைக்காதீங்க, உண்மை தான்



நீங்கள் வீடு வாங்க ரூ. 25 லட்சம் கடன் வாங்குகிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், வட்டியுடன் மாத தவணைகளை எல்லாம் சேர்த்து, உங்கள் கடன்பாக்கி காலத்தில் மொத்தம் எவ் வளவு கட்டுகிறீர்கள் தெரியுமா? ஒரு கோடி ரூபாய்! - என்னாது, வாங்கிய கடனுக்கு மூன்று மடங்கு அதிகமாக கட்டுகிறோமா என்று நம்பாமல் சந்தேக பார்வை பார்த்தால் படியுங்கள்:
* ஆறு மாதத்துக்கு முன்பு நீங்கள் வீட்டுக்கடன் வாங்கியிருந்தீர்களானால், பழைய வட்டிவீதத்தை மறந்து விட வேண்டும். இப்போது 11 சதவீதத்தை தாண்டி விட்டது.
* வீட்டுக்கடன் 25 லட்சம் ரூபாய் வாங்குகிறீர்கள். வட்டிவீதம் 11 சதவீதம். 20 ஆண்டுக்கு, அதாவது, 240 மாதங்களில் தவணையாக கட்ட ஒப்புக்கொள்கிறீர்கள்.
* புளோட்டிங் முறையில் வாங்கும் உங்களுக்கு மாத தவணை 25 ஆயிரத்து 805 ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.
* ஒரு மாதம் முன், வீட் டுக்கடன் வட்டிவீதம் 11.5 சதவீதமாக ஏறுகிறது. அரை சதவீதமானாலும், தவணைத் தொகையில் லேசாக கையை கடிக்கத்தானே செய்யும்.
* வட்டிவீதம் லேசாக உயர்ந்து விட்டாலும், மொத்த அசல் , வட்டித் தொகை மீதமுள்ள தவணைக் காலத்துக்கு பகிர்ந்து போட்டால், மாத சம்பளத் தில் பாதியை தாண்டி விடுகிறது என்றால், மேற்கண்டபடி தவணைக்காலம் அதிகப் படுத்தப்படுகிறது.
* இப்படி செய்தால், நீங்கள் வாங்கிய ரூ. 25 லட்சம் கடனுக்கு தவணைக்காலம் 240 ல் இருந்து 269 மாதங்களாக அதிகரிக்கப்படுகிறது. அதாவது, இரண்டு ஆண்டு, ஐந்து மாதம் அதிகமாக தவணை பாக்கி கட்டி வர வேண்டும்.
* ஆனால், இப்போது இன்னும் படு மோசமான நிலை. வீட்டுக்கடன் வட்டி சதவீதம் முக்கால் சதவீதம் அதிகரித்து 12.25 சதவீதமாகி விட்டது.
* மாத தவணையை அதிகமாக்கலாம் என்ற வசதியை வைத்து வங்கிகள் உங்கள் தவணை பாக்கியை இப்போதுள்ள வட்டியுடன் சேர்த்து போட்டால், 400 மாதங் களாக அதிகரிக்க வேண்டியிருக்கும்.
* அப்படியானால், 25 ஆயிரத்து 805 ரூபாயை நீங்கள் மொத்தம் 400 மாதங் கள் கட்டிவருவீர்கள்.
இப்ப புரிந்திருக்குமே, 400 மாதங்களுக்கு 25 ஆயிரத்தை பெருக்கி மொத்த தொகையை பாருங்கள், தலை சுற்றுகிறதா... ரிலாக்ஸ், உங்கள் வீட்டு மதிப்பு அப்போது ஒரு கோடியை தாண்டியிருக் குமே என்று ஆறுதல் பட்டுக் கொள்ளுங்களேன்.

நன்றி : தினமலர்


No comments: