Wednesday, August 6, 2008

இந்திய ரியல் எஸ்டேட் தொழிலில் குவியும் அன்னிய நேரடி முதலீடு


வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதை அடுத்து இந்தியாவில் இப்போது ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்து இருந்தாலும், அதில் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது அந்த தொழிலில் 4 பில்லியன் டாலர்களாக இருக்கும் அன்னிய நேரடி முதலீடு, இன்னும் 10 வருடங்களில் 25 பில்லியன் டாலராக உயர்ந்து விடும் அசோசெம் தெரிவித்திருக்கிறது. வட்டி விகிதம் 12 முதல் 16 சதவீதம் வரை இருப்பதால் இப்போது ரியல் எஸ்டேட் தொழில் கொஞ்சம் ஆட்டம் கண்டிருந்தாலும் அதில் முதலீடு செய்திருக்கும் மொத்த தொகையோ 15 பில்லியன் டாலர்கள். அதில் அன்னிய நேரடி முதலீடு 4 பில்லியன் டாலர்கள். இன்னும் பத்து வருடங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( ஜி.டி.பி. ) 10 சதவீதத்திற்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்ப்பதால், அப்போது வட்டி விகிதம் கூட இருந்தாலும் அது ஒன்றும் அவ்வளவாக பாதிப்பை ஏற்படுத்தாது என்று அசோசெம் அமைப்பின் தலைவர் ஷாஜன் ஜின்டால் தெரிவிக்கிறார். இந்தியாவில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கருதப்படுவதால் அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்று நிறைய பேர் அதில் முதலீடு செய்ய வருகிறார்கள். இந்தியாவில் இன்னும் 2 கோடி பேருக்கு வீடு கிடைக்காமல் இருக்கிறது என்று சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாம்.
நன்றி : தினமலர்


No comments: