Wednesday, August 6, 2008

கச்சா எண்ணெய் விலை சரிவால் மேலே போகிறது பங்குச் சந்தை


கச்சா எண்ணெய் பேரல் விலை 120 டாலருக்கும் குறைவாக சரிந்ததால், பங்குச் சந்தையில் நேற்று எழுச்சியைப் பார்க்க முடிந்தது. இனிவரும் நாட்களில் பங்குச் சந்தையில் ஏறுமுகத்தை காண வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தகம் சரிவில் தான் துவங்கியது. ஆசிய பங்குச் சந்தைகளில் நேற்று வர்த்தகம் இறங்கு முகத்தில் இருந்தாலும், நேற்று முன்தினம் அமெரிக்க பங்குச் சந்தை சரிவில் முடிந்து இருந்ததால், இந்திய பங்குச் சந்தையில் ஒரு வித இறுக்கம் காணப்பட்டது. சற்றே புள்ளிகள் இறங்குவதும், ஏறுவதுமாக சந்தை தள்ளாடி கொண்டு இருந்தது. அமெரிக்காவில் 'பெட் ரேட்' அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்ற செய்தியும், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஏற்றம் காரணமாக நேற்று பிற்பகலுக்கு மேல் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் ஸ்திரமான ஏற்றத்தை பார்க்க முடிந்தது. துவக்கத்தில் சந்தை சரிவை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது, உலோக பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது தான். 'சேசா கோவா' மற்றும் ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.ஆனால், பிற்பகலுக்கு பிறகு நிலைமை மாறியது. கச்சா எண்ணெய் விலை எப்போதும் இல்லாத வகையில், பேரல் ஒன்றின் விலை 120 டாலருக்கு குறைந்துள்ளது என்ற செய்தி வந்ததும் தான் தாமதம், நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிந்தது.வங்கித்துறை பங்குகள் நல்ல ஏற்றத்தைப் பெற்றன. போதாக்குறைக்கு ரியல் எஸ்டேட், சிமென்ட் பங்குகள் திடீர் ஏற்றத்தைப் பெற்றன. சமீப நாட்களாக சர்க்கரை பங்குகள் இனிக்கத் துவங் கியுள்ளன. சந்தை அடிமட்டத்திற்கு சரிந்து இருந்த போது வாங்கியவர்கள் எல்லாம் ஒரு மடங்கு லாபத்தைப் பார்க்க துவங்கினர். இன்னும் சில நாட்களுக்கு சர்க்கரை பங்குகள் தித்திக்கும் வாய்ப்பு உள்ளது.நேற்று முன்தினம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 508 கோடிக்கும், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.47 கோடிக்கும் பங்குகளை விற்றன. இதனால், சரிவை சந்திக்க முடிந்தது.உலகிலேயே அமெரிக்காவில் தான் அதிகளவு பெட்ரோல் செலவிடப்படுகிறது. அங்கு இப்போது பெட்ரோல் தேவை குறைந்து இருக்கிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. இன்னும் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே, 13 ஆயிரம் புள்ளிகளை சந்தை எட்டிய போது முதலீடு செய்தவர்களுக்கு இப்போது நல்ல லாபம் கிடைக்க துவங்கியுள்ளது.நேற்று ஒரு கட்டத்தில் மும்பை பங்குச் சந்தை 15 ஆயிரம் புள்ளிகளை தொடும் நிலை வரை வந்து, பின்னர் வர்த்தக முடிவில், 14,961 புள்ளிகளில் நிலை பெற்றது. இது முதல் நாளை விட 383 புள்ளிகள் அதிகம்.தேசிய பங்குச் சந்தையான 'நிப்டி' நேற்று 4,500 புள்ளிகளை கடந்துள்ளது. மேலும் வர்த்தக முடிவில் நான்காயிரத்து 503 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. இது பங்குச் சந்தை மேலே போகும் என்பதற்கு ஒரு நல்ல அறிகுறி என தொழில்நுட்ப பகுப்பாய் வாளர்கள் கூறுகின்றனர். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, டி.எல்.எப்., ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ரேன்பாக்சி பங்குகள் கணிசமாக உயர்ந்தன. முதலீட்டாளர்கள் இப்போதெல்லாம் தாங்கள் வாங்கிய விலையில் இருந்து, 20 சதவீதம் பங்கு விலை உயர்ந்தாலே பங்குகளை விற்க வரிசை கட்டி நிற்கின்றனர். இதன் காரணமாக தள்ளாட்டம் காண முடிகிறது. இந்நிலை, இந்தாண்டு வரை இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

நன்றி : தினமலர்


2 comments:

முரளிகண்ணன் said...

\\உலோக பங்குகளின் விலை வீழ்ச்சி கண்டது தான்\\

what is the reason behind it?

பாரதி said...

the reason is steel prices may fall by USD 100 per tonne in the coming quarters