காசு கொடுத்தால்தான் செய்தி கிடைக்கும் என்கிற நிலை இப்போது இல்லை. இணையம் வந்த பிறகு செய்திகளை இலவசமாகத் தெரிந்துகொள்ள முடிவதுடன் செய்திகளை பல்வேறு ஊடகங்கள் எந்தெந்தக் கோணத்தில் வெளியிடுகின்றன என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவும் வழி இருக்கிறது. செய்திகள் திரட்டப்பட்டு திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. யாருக்கு என்ன விருப்பமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
பெரும்பாலான செய்தி இணைய தளங்களில் உலவுவதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. அச்சில் வரும் செய்தித்தாள்கள் இதுபோன்ற இணைய தளங்களை நடத்தும்போது, விளம்பர வருவாய் என்பது யானைப் பசிக்குச் சோளப்பொறி போன்றதுதான். இதனால் சில இணைய தளங்கள் செய்திகளைப் படிப்பதற்கு சந்தா வசூலிக்கின்றன. சில இணைய தளங்களில் பிரத்யேகச் செய்திகளுக்கு மட்டும் சந்தா செலுத்தினால் போதும். ஆனால், இணையச் செய்தித் திரட்டிகள் இதற்கெல்லாம் வெடி வைக்கின்றன. செய்தி இணைய தளங்களில் உள்ள செய்திகளைத் திரட்டிகள் இலவசமாக வெளியிட்டுவிடுவதால், சந்தா வசூலிப்பது என்பதே அர்த்தமில்லாததாகிவிடுகிறது.
பெரும்பாலான இணையச் சேவைகளைப் போன்றே, செய்தித் திரட்டிகளிலும் முதலிடத்தில் இருப்பது கூகுள் நிறுவனம்தான். செய்திகளைத் தேடுவதற்காக இணையத்தில் மேய்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது கூகுள் நியூஸ் எனப்படும் கூகுளின் செய்தித் திரட்டி சேவைதான். இந்தச் சேவையில் இணைத்துக் கொள்ளும்படி செய்தி இணைய தளங்கள் விண்ணப்பித்துவிட்டால், முக்கியச் செய்திகளின் பட்டியலில் அந்தக் குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும் செய்தியும் பட்டியலிடப்படும். அதன் மூலம் இணையதளத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது விளம்பர வருவாய்க்கு உதவும். பொதுவாக, இந்தத் திரட்டிகள் வழியாக இணைய தளங்களுக்கு வருவோரின் விகிதம் கிட்டத்தட்ட பாதி அளவுக்கு இருப்பதால், இவற்றில் இணைத்துக் கொள்ளாத செய்தி இணைய தளங்களே இல்லை எனலாம்.
÷அதேபோல், எல்லா இணைய தளங்களிலுமுள்ள செய்திகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும் என்பதால் நேரடியாக இணைய தளங்களுக்குச் செல்வதைவிட திரட்டிகளைப் பார்வையிடுவதையே இன்றைய இணைய வாசகர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனால், திரட்டிகளும் வருவாய் ஈட்டிக்கொள்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், செய்தி இணைய தளங்களும் செய்தித் திரட்டிகளும் ஒன்றையொன்று சார்ந்தவை. இந்தச் சார்புத் தன்மையில் சமநிலை எப்போதெல்லாம் தவறிப்போகிறதோ, அப்போதெல்லாம் இரு தரப்புக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன.
ஊடக பெரும்புள்ளியான ரூபர்ட் முர்டாக் அண்மையில் கூகுள் நிறுவனத்துடன் மோதியதால், விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவருக்குச் சொந்தமான சில இணைய தளங்களிலுள்ள சந்தா செலுத்திப் பார்க்க வேண்டிய பங்கங்களை கூகுள் இலவசமாக வெளியிட்டு வந்ததால் இந்தப் பிரச்னை உருவானது. முர்டாக்கின் கோரிக்கைகளை கூகுள் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், தனது முக்கிய செய்தி இணைய தளங்களை கூகுள் செய்தித் திரட்டியின் பட்டியலிலிருந்து எடுத்துவிடப்போவதாக அறிவித்தார். ஆனாலும் கூகுள் அசைந்து கொடுக்கவில்லை. எங்கள் வளர்ச்சிக்கு யாரும் தேவையில்லை என இருதரப்புமே பிடிவாதமாக இருந்து வந்தன.
இப்படியொரு சூழ்நிலையைப் பயன்படுத்தி, கூகுளில் இருந்து இணைய தளச் செய்தி வெளியீட்டாளர்களைப் பிரிப்பதற்கு வியூகம் வகுத்தது மைக்ரோசாஃப்ட். கூகுளில் இருந்து வெளியேறி தனது பிங் திரட்டியில் இணைத்துக் கொள்வதற்காக செய்தி வெளியீட்டாளர்களுடன் அந்த நிறுவனம் பேரம் பேசி வருவதாகவும் செய்தி வெளியானது. முக்கியச் செய்தி இணைய தளங்களிலிருந்து பிரத்யேகச் செய்திகளைப் பெற்று அவற்றை பிங் திரட்டியில் இணைத்துக் கொள்ள மைக்ரோசாஃப்ட் முயன்று வருவதாகக் கூறப்பட்டது. பிங் தேடுபொறியை அறிமுகம் செய்த பிறகு தேடல் மற்றும் விளம்பரச் சந்தையில் மைக்ரோசாஃப்ட் வேகமாக முன்னேறியிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டன.
மைக்ரோசாஃப்டின் காய் நகர்த்தல்கள் கூகுள் செய்தித் திரட்டியை பெருமளவு பாதிக்கச் செய்யும் என்று கருதப்பட்டது.
இதற்கு மேல் பிடிவாதமாக இருந்தால், வருவாயை இழக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த கூகுள், தற்போது புதிய திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, சந்தா செலுத்திப் பார்க்கவேண்டிய இணைய தளங்களில் 5 பக்கங்களை மட்டுமே இலவசமாகப் பார்க்க அனுமதிக்கும் வகையில் திரட்டியை மாற்றி அமைத்திருக்கிறது. அதற்கு மேல் பார்க்க முயன்றால் சம்பந்தப்பட்ட இணைய தளத்தின் சந்தா செலுத்துவதற்கான பக்கம் காட்டப்படும். இதற்காக "ஃபர்ஸ்ட் க்ளிக் ஃப்ரீ' என்கிற சேவையை கூகுள் தொடங்கியிருக்கிறது.
ஆயினும் இதெல்லாம் இணைய தளச் செய்தி வெளியீட்டாளர்களைச் திருப்தியடைச் செய்யாது என்றே கருதப்படுகிறது. ஒருவர் ஓர் இணைய தளத்தில் 5 பக்கங்களுக்கு மேல் பார்ப்பது என்பதே அரிதுதான்.
அப்படிப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டால், வேறு இணைய தளத்துக்குச் சென்று அங்கு இலவசமாகக் கிடைக்கக்கூடிய 5 பக்கங்களைப் பார்க்க முடியும். இதனால், இலவசமாக 5 பங்கங்களை அனுமதிப்பதென்பது இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததாகிவிடாது.
ஊடகங்களுக்கு எதிரான மோதலில் தனது நிலையிலிருந்து கூகுள் இறங்கி வந்திருப்பதற்கு முக்கியக் காரணம், இந்தப் போட்டியில் மைக்ரோசாஃப்ட் நுழைந்துவிடக்கூடாது என்பதுதான். அதன் நோக்கமும் கிட்டத்தட்ட நிறைவேறிவிட்டது. ஆனால், சண்டை முடிந்துவிடவில்லை; சமாதானம் பேசவும் ஆளில்லை.
கட்டுரையாளர் : எம். மணிகண்டன்
நன்றி : தினமணி
Thursday, December 10, 2009
பெற்றோர்க்கும் பொறுப்பு உண்டு
அதிக எண்ணிக்கையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வேன்களின் பர்மிட் ரத்து செய்யப்படும் என்று தமிழகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சில இடங்களில் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
இது ஏதோ புதிய நடவடிக்கை அல்லது புதிய அரசாணை போல தோற்றம் தந்தாலும், அழுகிற குழந்தைக்குப் பழைய கிலுகிலுப்பையைக் காட்டி சமாதானம் செய்வதைப் போன்று, வேதாரண்யம் விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவத்தால் கொதித்துப் போயிருக்கும் சமூக மனஇறுக்கத்தைத் தளர்த்தும் உத்தியாக இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்கள். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் எந்தவொரு வாகனத்தின் பர்மிட்டையும் ரத்து செய்து, வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் ஏற்கெனவே இடமிருந்தாலும் இத்தனை காலமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழும் முன்பாகவே, இதுபோன்ற ஓர் அறிவிப்பின் மூலம், இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதுதான் இந்த அறிவிப்பின் நோக்கம்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி பஸ்கள், தனியார் வேன்கள், ஆட்டோக்கள் எல்லாமும் இத்தனை நாளும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தாலும், போக்குவரத்துத் துறையோ அல்லது காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம் எல்லாரும் அறிந்ததுதான்.
இத்தகைய நிகழ்வுகளில் மிகப்பெரும் மெüனக் குற்றவாளிகள் பெற்றோர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பூக்களை கூடையில் அள்ளிப்போடுவதைப் போல ஆட்டோக்களிலும் வேன்களிலும் ஏற்றிவிட்டு வரும் பெற்றோரை எந்த வகையில் குற்றவாளிகள் அல்ல என்று சொல்ல முடியும்? ஆட்டோ அல்லது வேன் சாதாரணமாக சாய்ந்தாலும்கூட எத்தனை குழந்தைகள் நெரிசலில் சிக்கி எலும்பு முறியும், உயிரை இழக்கும் என்பது தெரிந்திருந்தும்கூட, அந்த வாகனங்களில் ஏற்றி அனுப்பும் பெற்றோரின் அறியாமையை எப்படிப் பொறுத்துக்கொள்வது?
"பள்ளி வெகுதொலைவில் உள்ளது, எங்களால் குழந்தைகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல இயலாது' என்பதும், "அளவான எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ அல்லது வேன்களில் மாதக் கட்டணம் அதிகம்' என்பதும்தான் அவர்கள் கூறும் காரணம். தனியார் பள்ளிகளுக்கு கொட்டியழும் கல்விக் கட்டணத்தில் ஒப்பிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் செலவிடும் கூடுதல் தொகை மிகச் சிறிதுதான் என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.
இதுபோன்ற வாகனங்களில் மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளை ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும் ஏற்றிக்கொண்டு பள்ளிக் கதவை மூடும்முன்பாகப் போய்ச் சேருவதற்காக சாலை விதிகளை மீறும் பெற்றோரும் இருக்கிறார்கள். இவர்கள் விபத்துக்குள்ளாகிறபோது, பள்ளிக் குழந்தை விபத்தில் சாவு என்கிற பச்சாதாபச் செய்தியாக மாறுகிறதே தவிர, பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்ட ஒரு தந்தையின் அறியாமை பேசப்படுவதில்லை. அண்மையில், சாலை விபத்தில் சிக்கியும் ஸ்டிரெச்சரில் வந்து, சிறப்பு அனுமதியுடன் தேர்வு எழுதிய மாணவி படத்துடன் செய்தியாக்கப்பட்டார். ஆனால், அந்த விபத்தின் தன்மை குறித்து யாருமே பேசவில்லை.
கல்விக் கூடத்தின் அருகிலேயே குழந்தைகள் வசிக்க வேண்டும் என்பது நகர்ப்புறங்களில் சாத்தியமில்லை. ஆனால், இத்தகைய சிக்கலைத் தீர்க்க வெறுமனே வாகனச் சோதனை என்கிற கண்துடைப்பைக் காட்டிலும் வேறு நல்ல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம்.
தனியார் பள்ளிகளில் பஸ் வசதி இருந்தும்கூட, வேன்களிலும் ஆட்டோக்களிலும் குழந்தைகளை அனுப்பக் காரணம் பள்ளி பஸ்களின் கட்டணம் மிகஅதிகமாக இருப்பதுதான். மாதம் ரூ.300, ரூ.400 மிச்சம்பிடித்துவிடலாம் என்ற நடுத்தரக் குடும்ப மனநிலைதான் இத்தகைய பாதுகாப்பாற்ற சூழலுக்கு உடன்பட வைக்கிறது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, வெகு தொலைவிலிருந்து வரும் மாணவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கல்வித் துறை கணக்கெடுத்து, ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பஸ்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும், அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணத்தை இக் குழந்தைகளிடம் வசூலிக்க வேண்டும் என்று கட்டாயமாக்குவதும்தான் இப்பிரச்னைக்கு குறைந்தபட்சத் தீர்வாக அமையும்.
அரசு போக்குவரத்துக் கழகங்களே இந்தப் பள்ளி வாகனச் சேவையில் ஈடுபடலாம் என்று பரிந்துரைக்கத் தோன்றினாலும், இலவச பஸ் பாஸ் பெற்ற பள்ளி மாணவர்களை, அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் நடத்துநர்களும் ஓட்டுநர்களும் அலைக்கழிப்பதைப் பார்த்தால் அத்தகைய பரிந்துரைகளைச் சொல்ல மனம் வருவதில்லை. இந்தப் பள்ளிக் குழந்தைகளை இந்த நடத்துநர்களும் ஓட்டுநர்களும் ஓசியில் ஏற்றிச் செல்லப் போவதில்லை. இவர்களுக்கான முழு கட்டணத்தையும் மானியமாக பல கோடி ரூபாயை அரசு செலுத்துகிறது. ஆனாலும், இந்தக் குழந்தைகளைக் கண்டவுடன் பஸ்ûஸ நிறுத்தாமல் கடந்துசெல்வதும், தள்ளிப்போய் நிறுத்துவதும், குழந்தைகள் தங்கள் பாடப்புத்தக மூட்டையுடன் ஓடிப்போய் ஏறுவதும் எல்லா நகரங்களிலும் வெட்கமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெற்றோர்கூட தட்டிக் கேட்பதில்லை. இந்த ஓட்டுநர் நடத்துநர்களும், தங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது என்பதை நினைப்பதில்லை.
நன்றி : தினமணி
இது ஏதோ புதிய நடவடிக்கை அல்லது புதிய அரசாணை போல தோற்றம் தந்தாலும், அழுகிற குழந்தைக்குப் பழைய கிலுகிலுப்பையைக் காட்டி சமாதானம் செய்வதைப் போன்று, வேதாரண்யம் விபத்தில் பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவத்தால் கொதித்துப் போயிருக்கும் சமூக மனஇறுக்கத்தைத் தளர்த்தும் உத்தியாக இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்கள். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் எந்தவொரு வாகனத்தின் பர்மிட்டையும் ரத்து செய்து, வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கச் சட்டத்தில் ஏற்கெனவே இடமிருந்தாலும் இத்தனை காலமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழும் முன்பாகவே, இதுபோன்ற ஓர் அறிவிப்பின் மூலம், இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதுதான் இந்த அறிவிப்பின் நோக்கம்.
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி பஸ்கள், தனியார் வேன்கள், ஆட்டோக்கள் எல்லாமும் இத்தனை நாளும் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தாலும், போக்குவரத்துத் துறையோ அல்லது காவல்துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம் எல்லாரும் அறிந்ததுதான்.
இத்தகைய நிகழ்வுகளில் மிகப்பெரும் மெüனக் குற்றவாளிகள் பெற்றோர்கள்தான் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். பூக்களை கூடையில் அள்ளிப்போடுவதைப் போல ஆட்டோக்களிலும் வேன்களிலும் ஏற்றிவிட்டு வரும் பெற்றோரை எந்த வகையில் குற்றவாளிகள் அல்ல என்று சொல்ல முடியும்? ஆட்டோ அல்லது வேன் சாதாரணமாக சாய்ந்தாலும்கூட எத்தனை குழந்தைகள் நெரிசலில் சிக்கி எலும்பு முறியும், உயிரை இழக்கும் என்பது தெரிந்திருந்தும்கூட, அந்த வாகனங்களில் ஏற்றி அனுப்பும் பெற்றோரின் அறியாமையை எப்படிப் பொறுத்துக்கொள்வது?
"பள்ளி வெகுதொலைவில் உள்ளது, எங்களால் குழந்தைகளைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல இயலாது' என்பதும், "அளவான எண்ணிக்கையில் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ அல்லது வேன்களில் மாதக் கட்டணம் அதிகம்' என்பதும்தான் அவர்கள் கூறும் காரணம். தனியார் பள்ளிகளுக்கு கொட்டியழும் கல்விக் கட்டணத்தில் ஒப்பிடும்போது, குழந்தைகளின் பாதுகாப்புக்காகச் செலவிடும் கூடுதல் தொகை மிகச் சிறிதுதான் என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.
இதுபோன்ற வாகனங்களில் மட்டுமல்ல, தங்கள் குழந்தைகளை ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும் ஏற்றிக்கொண்டு பள்ளிக் கதவை மூடும்முன்பாகப் போய்ச் சேருவதற்காக சாலை விதிகளை மீறும் பெற்றோரும் இருக்கிறார்கள். இவர்கள் விபத்துக்குள்ளாகிறபோது, பள்ளிக் குழந்தை விபத்தில் சாவு என்கிற பச்சாதாபச் செய்தியாக மாறுகிறதே தவிர, பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்ட ஒரு தந்தையின் அறியாமை பேசப்படுவதில்லை. அண்மையில், சாலை விபத்தில் சிக்கியும் ஸ்டிரெச்சரில் வந்து, சிறப்பு அனுமதியுடன் தேர்வு எழுதிய மாணவி படத்துடன் செய்தியாக்கப்பட்டார். ஆனால், அந்த விபத்தின் தன்மை குறித்து யாருமே பேசவில்லை.
கல்விக் கூடத்தின் அருகிலேயே குழந்தைகள் வசிக்க வேண்டும் என்பது நகர்ப்புறங்களில் சாத்தியமில்லை. ஆனால், இத்தகைய சிக்கலைத் தீர்க்க வெறுமனே வாகனச் சோதனை என்கிற கண்துடைப்பைக் காட்டிலும் வேறு நல்ல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளலாம்.
தனியார் பள்ளிகளில் பஸ் வசதி இருந்தும்கூட, வேன்களிலும் ஆட்டோக்களிலும் குழந்தைகளை அனுப்பக் காரணம் பள்ளி பஸ்களின் கட்டணம் மிகஅதிகமாக இருப்பதுதான். மாதம் ரூ.300, ரூ.400 மிச்சம்பிடித்துவிடலாம் என்ற நடுத்தரக் குடும்ப மனநிலைதான் இத்தகைய பாதுகாப்பாற்ற சூழலுக்கு உடன்பட வைக்கிறது.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை, வெகு தொலைவிலிருந்து வரும் மாணவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கல்வித் துறை கணக்கெடுத்து, ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பஸ்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பதும், அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணத்தை இக் குழந்தைகளிடம் வசூலிக்க வேண்டும் என்று கட்டாயமாக்குவதும்தான் இப்பிரச்னைக்கு குறைந்தபட்சத் தீர்வாக அமையும்.
அரசு போக்குவரத்துக் கழகங்களே இந்தப் பள்ளி வாகனச் சேவையில் ஈடுபடலாம் என்று பரிந்துரைக்கத் தோன்றினாலும், இலவச பஸ் பாஸ் பெற்ற பள்ளி மாணவர்களை, அரசுப் போக்குவரத்துக் கழக பஸ் நடத்துநர்களும் ஓட்டுநர்களும் அலைக்கழிப்பதைப் பார்த்தால் அத்தகைய பரிந்துரைகளைச் சொல்ல மனம் வருவதில்லை. இந்தப் பள்ளிக் குழந்தைகளை இந்த நடத்துநர்களும் ஓட்டுநர்களும் ஓசியில் ஏற்றிச் செல்லப் போவதில்லை. இவர்களுக்கான முழு கட்டணத்தையும் மானியமாக பல கோடி ரூபாயை அரசு செலுத்துகிறது. ஆனாலும், இந்தக் குழந்தைகளைக் கண்டவுடன் பஸ்ûஸ நிறுத்தாமல் கடந்துசெல்வதும், தள்ளிப்போய் நிறுத்துவதும், குழந்தைகள் தங்கள் பாடப்புத்தக மூட்டையுடன் ஓடிப்போய் ஏறுவதும் எல்லா நகரங்களிலும் வெட்கமில்லாமல் நடந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெற்றோர்கூட தட்டிக் கேட்பதில்லை. இந்த ஓட்டுநர் நடத்துநர்களும், தங்களுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது என்பதை நினைப்பதில்லை.
நன்றி : தினமணி
டாடா ஆலைக்கு 900 ஹெக்டேர் நிலம்: வியட்நாம் அரசு ஒப்புதல்
டாடா ஆலை இரும்புத் தொழிற்சாலை அமைக்க வியட்நாம் அரசு 900 ஹெக்டேர் நிலத்தை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டில் கூட்டு நிறுவனமாக ஆலை தொடங்க டாடா நிறுவனம் முன் வந்துள்ளதாகவும், அங்குள்ள ஹடின்ஸ் மாகாணத்தில் 725 ஹெக்டேர் நிலம் ஆலைக்காக ஒதுக்கப்படும் எனவும், 150 ஹெக்டேர் நிலம் குடியிருப்பு பகுதிகளுக்காக ஒதுக்கப்படும் எனவும், இது தவிர துணை நிலையங்களுக்கு 37 ஹெக்டேர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இந்த ஆலை, ஆண்டுக்கு 4.5 கோடி டன் இரும்பு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த கூட்டு நிறுவனத்தில் 65 சதவீத பங்குகள் டாடா நிறுவனம் வசம் இருக்கும். ஏற்கெனவே ஆலைக்கென டாடா நிறுவனம் கண்டறிந்த இடத்தை தைவான் நிறுவனத்துக்கு ஒதுக்கியதால் புதிய இடத்தை முடிவு செய்து அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
வியட்நாம் ஸ்டீல் கார்ப்பரேஷன், வியட்நாம் சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த ஆலையில் 35 சதவீதம் முதலீடு செய்ய உள்ளன. கடந்த 2007ம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இங்குள்ள இரும்பு கனிம சுரங்கத்தில் 30 சதவீத பங்கு டாடா நிறுவனம் வசம் இருக்கும். இந்த பகுதியில் குளிர் உருட்டாலை அமைக்கவும் டாடா ஸ்டீல் திட்டமிட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது புதிய ஆலையை 2010ல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது நிலம் ஒதுக்குவதற்கு கால தாமதம் ஆனதால் இத்திட்டப் பணி 2012ல் முடிவடைந்து உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி : தினமலர்
'டல்' அடிக்குது பங்குச் சந்தை: டபாய்க்குமா, பறக்குமா?
உலகளவில் பிரச்னைகள் இல்லாததால் சந்தையிலும் பெரிய மாற்றம் இல்லை. சரிவில் வாங்கியவர்கள் லாபமடைந்தனர்; விற்றவர்களும் மறுபடி ஒரு சரிவுக்காக காத்திருக்கின்றனர். திங்களும், நேற்றும் சிறிய சரிவைச் சந்தித்தன. ஆனால், நேற்று முன்தினம் சந்தை, 'ஜம்'மென பயணித்தது. பெரிய துபாய் புயலுக்கு பிறகும், சந்தை 17,000 புள்ளிகளுக்கும் மேலே தான் இருக்கிறது. திங்களன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, நேற்று முன் தினம், பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தான், சந்தை யை 244 புள்ளிகளுக்கு மேல் தூக்கிச் சென்றது. அதாவது, 'வரும் மார்ச் மாதம், அரசு, 25 ஆயிரம் கோடி ரூபாய் அதிகப்படியாக செலவழிக்கும். அதற்காக பார்லிமென் டின் அனுமதியை கோரும். சில மாதங்களுக்குள் அரசு நிறுவன பங்குகள் விற்பனை நடக்கும்' எனக் கூறினார். இது, சந்தையை மேலே தூக்கிச் சென்றது. நேற்று முன்தினம், 'நிப்டி' 18 மாத உச்சத்திற்கு போனது ஒரு சாதனை. கடந்த ஆண்டு சோதனை படைத்த சந்தை, தற்போது சாதனை படைப்பது, ஆறுதல். நேற்று சந்தை மதிப்பு உலகளவில் குறைந்திருந்ததால், இங்கும் குறைந்தது. மெட்டல் மற்றும் வங்கிப் பங்குகள், சரிவுக்கு காரணமாக இருந்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 102 புள்ளிகள் குறைந்து 17,125 புள்ளிகளுடனும், தேசியப் பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறந்து 5,112 புள்ளிகளுடனும் முடிந்தது.புதிய வெளியீடுகள் : ஜே.எஸ்.டபிள்யூ., எனர்ஜி (ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் கம் பெனியின் ஒரு அங்கம்) தனது புதிய வெளியீட்டை டிச., 7ம் தேதி முதல் கொண்டு வந் தது. நேற்றைய இறுதியில் 1.67 தடவை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு முடிந்தது.கோத்ரெஜ் பிராபர்டீசின் புதிய வெளியீடு நேற்று வரை 1.23 தடவை வரை செலுத்தப்பட்டிருந்தது. வெளியீடு நாளை வரை திறந்திருக்கும்.
மியூச்சுவல் பண்ட்கள் : கடந்த ஆண்டு சந்தை குறைவாக இருந்த போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் கோடிகளுக்கும் கீழே சென்றிந்தது. தற்போது, மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு எட்டு லட்சம் கோடிகளுக்கும் மேலே சென் றிருக்கிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறது? மியூச்சுவல் பண்ட்களின் மொத்த மதிப்பு கூடியுள்ளது; அதே சமயம் முதலீட்டாளர் களும் அதிகளவில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்துள்ளனர்.
தற்போது, பங்குச் சந்தைகள் டெர்மினல்கள் மூலமாகவே, மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை ஆகியவைகள் மூலமாக மியூச்சுவல் பண்ட்களின் யூனிட்டுகளை வாங்கலாம். சில மியூச்சுல் பண்ட்கள் தங்களை பங்குச் சந்தைகள் இணைத்துக் கொண்டுள்ளன. இன்னும் பல மியூச்சுவல் பண்ட்கள் சேரவும் உள்ளன. மதியம் 3 மணி வரை அன்றைய விலையிலேயே வாங்கலாம் என்பது தான் இதில் விசேஷம். தற்சமயம் மறுபடி பல மியூச்சுவல் பண்ட்கள் தங்களது புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளன. காற் றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமே?
வீட்டுக் கடன் சந்தையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. ஆதலால், வீட்டுக்கடன் 8 சதவீதத்தை தொட்டு விட்டது. கடன் கொடுப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி வேறு. கடன் வாங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். ஆனால், வீடு விலை குறைய வேண்டுமே? கனவு இல்லத்தை நனவு இல்லமாக ஆக்க வாருங்கள் என்று, கூவிக் கூவி வீட்டுக் கடன் கம்பெனிகள் அழைக் கின்றன. பணப் புழக்கம் அதிகமாக இருப்பதால், ரிசர்வ் வங்கி அதைக் குறைப்பதற்காக சி.ஆர்.ஆர்., சதவீதத்தை கூட்டி விடுமா என்ற பேச்சு வேறு அடிபடுகிறது.
நவம்பர் கார் விற்பனைகார் விற்பனை சூடு பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இதே சமயம் விற்பனையை விட, 46 சதவீதம் கூடியுள்ளது. கார் கம்பெனிகளின் பங்குகளுக்கு கொண்டாட்டம் தான். கடந்த ஆண்டு அதிகம் அடிபட்ட பங்குகள் கார் கம்பெனிகள். தற்போது ஜம்மென சுகமான சாலையில் வழுக்கிக் கொண்டு செல்லும் கார் போல அந்தக் கம்பெனிகளின் பங்குகள் பயணிக்கின்றன.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? : சந்தை சிறிய ஏற்ற, இறக்கங்களுடன் தான் இருக்கும். நல்ல வாய்ப்புகளுக்கு காத்திருங்கள். தற்போது வாங்குவதாக இருந்தால் ப்ளூ சிப் பங்குகளாக பார்த்து வாங்குகள். குறுகிய காலத்தில் நஷ்டம் இருந்தாலும் நீண்டகாலத்தில் லாபம் இருக்கும். இந்த வாரத்தில் பொதுவாக பார்த்தால், மேலேயும் போகமால் கீழேயும் வராமல், 'டல்' அடித்து கொண்டிருக்கிறது. மேலே பறக்குமா அல்லது டபாயக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 5,200க்கு மேல் நிப்டி நான்கு நாட்களுக்கு நிலை பெற்றால், பலரும் உள்ளே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. லாபம் இருந்தால் கையில் காசு பார்ப்பதே உத்தமம்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்
Labels:
பங்கு சந்தை நிலவரம்,
மியூச்சுவல் ஃபண்ட்,
வீடுகடன்
Wednesday, December 9, 2009
அஜிதா ஏன் நக்சலானாள்...?
இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து வெளியிலிருந்து வராது. நம் நாட்டுக்குள்ளேயே உருவாகி வரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் உருவாகும் ஆபத்துதான் அது எனப் பலரும் கூறி வருகிறார்கள்.
மாவோயிஸ்டுகளை அடக்கி ஒடுக்க கூடுதலான போலீஸôரும், ராணுவத்தினரும் சேர்ந்து ""ஆபரேஷன் கிரீன் ஹண்ட்'' எனப்படும் பச்சை வேட்டை திட்டம், மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. "நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் அல்லது கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ளுங்கள்' என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஆனால் இந்தப் பிரச்னையை ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்னையாகக் கருதி நடவடிக்கை எடுக்காமல், ஓர் அடித்தட்டு சமூகப் பிரச்னை என்ற நோக்கில் ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்கள் மற்றும் நிர்வாக வல்லுநர்களின் கருத்து.÷
மாவோயிஸ்டுகளின் போராட்டக் குழுவில் நிறையப் பெண்கள் உருவாகியிருப்பது இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது. கடந்த நான்கு மாதங்களில் மேற்கு வங்கத்தின் மேற்கு மிதுனபுரி பகுதியில் 20 பெண் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளைப் போலீஸôர் கைது செய்துள்ளனர். அதில் மாலா குமாரி எனும் 20 வயது குமரிப்பெண் ஒருவர். இவர் மாவோயிஸ்டுகளின் உயர் கமிட்டி உறுப்பினர். ஒரு தாக்குதல் பணிக்குத் தலைமையேற்று கையில் கண்ணிவெடிகுண்டுகள், பிஸ்டல்கள் போன்றவற்றுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதுபோலவே சுமன்மண்டி எனும் 50 வயதுப் பெண் ஒருவரின் தலைமையில் 14 பெண்கள் லால்கர் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நிறையப் பெண் போராளிகள் யுத்தவெறியுடன் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கரடு முரடான பகுதிகளில் ஆண்களுக்குச் சமமாக மிகவும் அசெளகரியமான சூழ்நிலைகளில் போராடுவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனர். இதுபோன்ற வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு ஏன், எப்படி, எதற்காக வந்தது எனும் கேள்வி எழுகிறது. இவர்களில் பலருக்கு மா சேதுங், கார்ல் மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் போன்றவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது.
2007-ம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் கத்சிரோலி எனும் பகுதியில் சுமன் எனும் 18 வயதே நிரம்பிய இளம் பெண் மாவோயிஸ்டுகளின் தீவிரவாதப் பயிற்சி முகாமில் ஆயுதப்பயிற்சி பெற்று வந்தார். அவரைப் பேட்டி கண்ட ஒரு பத்திரிகையாளர், ""இவருக்கு கம்யூனிஸத்தைப் பற்றியோ, தீவிரவாதத்தைப் பற்றியோ எதுவுமே தெரியாது. தனது கிராமத்தில் பிழைப்புக்குச் சரியான வழி கிடையாது, தங்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்கள் மற்றும் தீவிரவாதிகளைத் தேடித் தங்கள் ஊருக்கு வரும் போலீஸ்காரர்கள் தங்களை மானபங்கம் செய்ய முயற்சிப்பது போன்றவற்றிலிருந்து விடுபட மாவோயிஸ்டுகளை அணுகினால் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள். இவர்கள் மாவோயிஸ்டுகளான காரணம் இதுதான்.
ஆக, ஆதிவாசி மக்களின்மீது மற்றவர்களால் நடத்தப்படும் கடுமையான நடவடிக்கைகளுக்கு அரசுத் தரப்பிலோ மற்ற அரசு சாராத நிறுவனங்கள் தரப்பிலோ எந்தவிதமான நல்லாதரவுடன் கூடிய நடவடிக்கைகள் அந்தப் பகுதியில் கிடையாது. நமது வளர்ந்துவிட்ட கிராமங்களில் உள்ளதுபோல், ஊர்ப் பஞ்சாயத்து அல்லது தனிப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தட்டிக்கேட்கும் பெரியவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் இல்லை.
இதுபோன்ற பகுதிகளுக்குச் செல்லும் மாவோயிஸ்டுகள் பாதிக்கப்பட்ட பெண்களைக் குறிவைத்து தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இதுபோன்ற ஆதிவாசி குடியிருப்புகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய போஸ்டரில் "வர்க்கப் போராட்டத்தின் மூலம் புரட்சி உருவாகும். புரட்சி இல்லாமல் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது' எனும் வாசகங்கள் உள்ளன. இப்பகுதியில் வேலை செய்யும் ஓர் அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி ஆதிவாசிகள் குடியிருப்புகளில் பொருளாதார முன்னேற்றமும் கிடையாது. அதுபோலவே எந்த அரசியல் கட்சியும் கிடையாது. எனவே இந்த அரசியல் வெற்றிடத்தை மாவோயிஸ்டுகள் மிக எளிதாக நிரப்பிவிடுகிறார்கள்.
மேலே கூறப்பட்ட விஷயங்கள் நமக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த நீட்டாலா குலாட்கர் என்பவர், அஜிதா எனும் 19 வயது நிரம்பிய பெண் நக்சலைட் பற்றி விரிவாகக் கூறுகிறார்.
1968-ம் ஆண்டு கேரளத்தில் ஒரு காவல் நிலையத்தைத் தாக்கும் நக்சலைட்டுகள் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டார்கள். அவர்களில் அஜிதா எனும் பெண்மணியும் ஒருவர். அஜிதா குனிக்கல் எனும் இந்தப் பெண் மும்பையில் பிறந்தவர். ஆனால் கேரளத்தில் வளர்ந்தவர். இவரது தந்தை குனிக்கல் நாராயணன், கேரளத்தில் நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கியவர். இவரது மனைவி மந்தாகினி குஜராத்தைச் சேர்ந்தவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அஜிதாவை, அவரது தந்தை நக்சல்பாரி இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தார்.
நக்சல்பாரி இயக்கத்தில் முழு ஈடுபாடு ஏற்பட்ட பின் அஜிதா கேரளத்தில் வயநாடு பகுதிக்குச் செல்கிறார். அங்கு மலைப்பிரதேசத்தில் ஆதிவாசிகளுக்கும், நிலச்சுவான்தார்களுக்கும் கடுமையான தகராறுகள் நடந்துவந்த நேரம் அது. நிறைய ஆதிவாசிகளின் நிலங்களை நிலச்சுவான்தார்கள் வன்முறையாக எடுத்துக்கொண்டு ஆதிவாசிகளை விரட்டி விடுவது என்பது ஒரு பிரச்னையாக உருவெடுத்தது.
இது பற்றி அரசு அதிகாரிகளிடம் கேட்டால், நிறைய பட்டா நிலங்கள் வெளியூர்களில் வசிக்கும் நிலச்சுவான்தார்களால் தனிப்பட்ட முறையில் நேரடியாக நிர்வகிக்கப்படாமல் இருந்தன.
இதுபோன்ற நிலங்களில் ஆதிவாசி கிராமத்தினர் சென்று குடியமர்ந்து கொண்டு சிறிய அளவில் விவசாயம் செய்து வந்தார்கள். இது இரண்டு மூன்று தலைமுறைகளாகத் தொடர, இந்த நிலங்கள் தங்களுக்குச் சொந்தம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அரசு ஆவணங்களில் பல நிலச்சுவான்தார்கள் பட்டாதாரர்களாகத் தொடர்ந்தார்கள்.
நிலங்களின் தேவைகளும், விலைமதிப்பும் உயர்ந்த பின்னர், நகர்ப்புறங்களில் இருந்த நிலச்சுவான்தார்கள் தங்கள் நிலங்களைத் தேடி மலைக்கிராமப் பகுதிகளுக்கு வந்து அவற்றை யாரோ ஆக்கிரமித்திருப்பதைக் கண்டு போலீஸ் உதவியுடன், உள்ளூர் ரவுடிகள், வஸ்தாதுகள் உதவியுடன், ஆதிவாசிகளைத் துரத்திவிட்டு, தங்கள் பட்டா நிலங்களை மீண்டும் கையகப்படுத்துவார்கள். வழக்கம்போல் போலீஸôர் சட்டப்படி பட்டா வைத்திருக்கும் பணக்காரர்களின் பக்கம் துணை நிற்பார்கள்.
நிலைமை இப்படி இருக்க ஆதிவாசி தலைவர்களும் நக்சல்பாரி இயக்கத்தினரும் நிலச்சுவான்தார் கையில் இருக்கும் பட்டாக்கள் உண்மையானவை அல்ல, போர்ஜரிகள் என வாதிட்டார்கள். இந்தப் பிரச்னை மிகவும் அதிகமாகி ஒரு கொரில்லா தாக்குதல்தான் சரி என ரகசியமாக நக்சல்பாரிகளின் கூட்டத்தில் பிரசாரம் தொடர்ந்தது.
கேரளத்தின் அன்றைய நம்பூதிரிப்பாட் அரசாங்கம் தலைச்சேரி எனும் இடத்தில் ஒரு பெரிய தாக்குதலைச் சமாளிக்க வேண்டியிருந்தது.
கண்ணூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பீடி கம்பெனி மிகப் பிரபலமாக வளர்ந்தது. அதில் சுமார் 20,000 பீடித் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்து நம்பூதிரிப்பாடின் கம்யூனிஸ்ட் அரசு ஒரு சட்டம் இயற்றியது. இந்தக் கூலி கட்டுபடியாகாது என்பதால், பீடி கம்பெனியை மூடிவிட்டு, தங்கள் சொந்த கர்நாடக மாநிலத்துக்கு அதை மாற்றிவிட்டார்கள்.
இந்த ஒரே நடவடிக்கையில் 20,000 ஏழைத் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவித்தார்கள். அவர்களைத் திரட்டி ஆயுதங்களைக் கொடுத்துப் பயிற்சி செய்து தலைச்சேரி போலீஸ் நிலையத்தைத் தாக்க முற்பட்டார்கள் நக்சலைட்டுகள்.
அஜிதா அந்தத் தாக்குதலில் பங்கெடுத்தார். ""அந்தத் தாக்குதலில் நிறைய ஆயுதங்கள் அங்கே கிடைக்கும் என்று நாங்கள் ஈடுபட்டோம். ஆனால் அந்தத் தாக்குதலில் நாங்கள் கைது செய்யப்பட்டு படுதோல்வி அடைந்தோம்'' என்கிறார் அஜிதா. அவர் ஏழரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
19 வயதே நிரம்பிய அஜிதா, போலீஸôரால் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் தன்னை நிறைய விபசார வழக்கில் கைதான பெண்களுடன் ஒரே அறையில் அடைத்து வைத்ததாகவும் கூறுகிறார். அதுமாதிரிப் பெண்கள் தாங்கள் வாழ்க்கையில் ஏழ்மையினாலும், ஆண்கள் மற்றும் போலீஸôர் பலரால் துன்புறுத்தப்பட்டு விபசாரத் தொழிலுக்கு வந்ததாகவும் கூறினார்களாம்.
இது ஒரு கேடுகெட்ட உலகம் என்பதைத் தன்னுடைய ஏழரை ஆண்டு சிறை அனுபவத்தில் முழுவதும் தெரிந்து கொண்டதாக அவர் கூறுகிறார்.
என் தந்தை எனக்குப் போதித்த சித்தாந்தங்களும், என்போன்ற சில துரதிருஷ்டமான பெண்கள் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களும் என்னைத் தீவிர போராளியாக மாற்றியது என்று கூறுகிறார் அஜிதா.
இதுபோன்ற தகவல்கள் வளர்ந்துவிட்ட மாநிலமாகிய தமிழகத்தின் குடிமக்களாகிய நமக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளை மாநில அரசு கவனிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வாழ்க்கைக் கட்டமைப்புகள் எனப்படும் சாலை வசதிகள், குடிநீர் வசதி, கல்வி, சுகாதாரம் போன்றவற்றுடன் அடிப்படை சமூகப் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
கல்வி அறிவில்லாத பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், தொழிலாளர்கள் எப்படித் தங்கள் எஜமானர்களால் நடத்தப்படுகிறார்கள் என்பவையெல்லாம் அடிப்படை விஷயங்களாக மாறுகின்றன. ஏழை, பணக்காரன் வித்தியாசம் மிக அதிகமாகி காழ்ப்புணர்ச்சி வளரக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு, சோஷலிச சித்தாந்தப்படி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக பல உயரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். காலப்போக்கில் அரசியல்வாதிகளின் ஊழல் பெருகி தாதாக்களுடனும், தனவந்தர்களுடனும் ஒரு கூட்டணி அமைத்து ஏழை மக்கள் அதிக அளவில் உருவாகித் தங்களுக்கு அரசு எதுவும் செய்யாது, போராடித்தான் நமக்கு வேண்டிய நன்மைகளை நாம் பெற முடியும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.
இதை முற்றும் உணர்ந்து, அதன் அடிப்படையில் திட்டமிடாமல், கூடுதல் போலீஸôரையும், பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி, ஆளில்லாத விமானங்களின் மூலம் குண்டு மழை பொழிந்து மாவோயிஸ்டுகளை அடக்கி ஒடுக்கிவிட முடியாது!
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி
மாவோயிஸ்டுகளை அடக்கி ஒடுக்க கூடுதலான போலீஸôரும், ராணுவத்தினரும் சேர்ந்து ""ஆபரேஷன் கிரீன் ஹண்ட்'' எனப்படும் பச்சை வேட்டை திட்டம், மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. "நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் அல்லது கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ளுங்கள்' என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஆனால் இந்தப் பிரச்னையை ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்னையாகக் கருதி நடவடிக்கை எடுக்காமல், ஓர் அடித்தட்டு சமூகப் பிரச்னை என்ற நோக்கில் ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அரசியல் நோக்கர்கள் மற்றும் நிர்வாக வல்லுநர்களின் கருத்து.÷
மாவோயிஸ்டுகளின் போராட்டக் குழுவில் நிறையப் பெண்கள் உருவாகியிருப்பது இந்தக் கருத்துக்கு வலு சேர்க்கிறது. கடந்த நான்கு மாதங்களில் மேற்கு வங்கத்தின் மேற்கு மிதுனபுரி பகுதியில் 20 பெண் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளைப் போலீஸôர் கைது செய்துள்ளனர். அதில் மாலா குமாரி எனும் 20 வயது குமரிப்பெண் ஒருவர். இவர் மாவோயிஸ்டுகளின் உயர் கமிட்டி உறுப்பினர். ஒரு தாக்குதல் பணிக்குத் தலைமையேற்று கையில் கண்ணிவெடிகுண்டுகள், பிஸ்டல்கள் போன்றவற்றுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதுபோலவே சுமன்மண்டி எனும் 50 வயதுப் பெண் ஒருவரின் தலைமையில் 14 பெண்கள் லால்கர் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நிறையப் பெண் போராளிகள் யுத்தவெறியுடன் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் கரடு முரடான பகுதிகளில் ஆண்களுக்குச் சமமாக மிகவும் அசெளகரியமான சூழ்நிலைகளில் போராடுவதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனர். இதுபோன்ற வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு ஏன், எப்படி, எதற்காக வந்தது எனும் கேள்வி எழுகிறது. இவர்களில் பலருக்கு மா சேதுங், கார்ல் மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் போன்றவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது.
2007-ம் ஆண்டு மகாராஷ்டிரத்தில் கத்சிரோலி எனும் பகுதியில் சுமன் எனும் 18 வயதே நிரம்பிய இளம் பெண் மாவோயிஸ்டுகளின் தீவிரவாதப் பயிற்சி முகாமில் ஆயுதப்பயிற்சி பெற்று வந்தார். அவரைப் பேட்டி கண்ட ஒரு பத்திரிகையாளர், ""இவருக்கு கம்யூனிஸத்தைப் பற்றியோ, தீவிரவாதத்தைப் பற்றியோ எதுவுமே தெரியாது. தனது கிராமத்தில் பிழைப்புக்குச் சரியான வழி கிடையாது, தங்களைக் கொடுமைப்படுத்தும் ஆண்கள் மற்றும் தீவிரவாதிகளைத் தேடித் தங்கள் ஊருக்கு வரும் போலீஸ்காரர்கள் தங்களை மானபங்கம் செய்ய முயற்சிப்பது போன்றவற்றிலிருந்து விடுபட மாவோயிஸ்டுகளை அணுகினால் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கிறார்கள். இவர்கள் மாவோயிஸ்டுகளான காரணம் இதுதான்.
ஆக, ஆதிவாசி மக்களின்மீது மற்றவர்களால் நடத்தப்படும் கடுமையான நடவடிக்கைகளுக்கு அரசுத் தரப்பிலோ மற்ற அரசு சாராத நிறுவனங்கள் தரப்பிலோ எந்தவிதமான நல்லாதரவுடன் கூடிய நடவடிக்கைகள் அந்தப் பகுதியில் கிடையாது. நமது வளர்ந்துவிட்ட கிராமங்களில் உள்ளதுபோல், ஊர்ப் பஞ்சாயத்து அல்லது தனிப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தட்டிக்கேட்கும் பெரியவர்கள் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் இல்லை.
இதுபோன்ற பகுதிகளுக்குச் செல்லும் மாவோயிஸ்டுகள் பாதிக்கப்பட்ட பெண்களைக் குறிவைத்து தங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
இதுபோன்ற ஆதிவாசி குடியிருப்புகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சிறிய போஸ்டரில் "வர்க்கப் போராட்டத்தின் மூலம் புரட்சி உருவாகும். புரட்சி இல்லாமல் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது' எனும் வாசகங்கள் உள்ளன. இப்பகுதியில் வேலை செய்யும் ஓர் அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி ஆதிவாசிகள் குடியிருப்புகளில் பொருளாதார முன்னேற்றமும் கிடையாது. அதுபோலவே எந்த அரசியல் கட்சியும் கிடையாது. எனவே இந்த அரசியல் வெற்றிடத்தை மாவோயிஸ்டுகள் மிக எளிதாக நிரப்பிவிடுகிறார்கள்.
மேலே கூறப்பட்ட விஷயங்கள் நமக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. இதைப் பற்றி ஆராய்ச்சி செய்த நீட்டாலா குலாட்கர் என்பவர், அஜிதா எனும் 19 வயது நிரம்பிய பெண் நக்சலைட் பற்றி விரிவாகக் கூறுகிறார்.
1968-ம் ஆண்டு கேரளத்தில் ஒரு காவல் நிலையத்தைத் தாக்கும் நக்சலைட்டுகள் சுற்றி வளைத்துப் பிடிக்கப்பட்டார்கள். அவர்களில் அஜிதா எனும் பெண்மணியும் ஒருவர். அஜிதா குனிக்கல் எனும் இந்தப் பெண் மும்பையில் பிறந்தவர். ஆனால் கேரளத்தில் வளர்ந்தவர். இவரது தந்தை குனிக்கல் நாராயணன், கேரளத்தில் நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கியவர். இவரது மனைவி மந்தாகினி குஜராத்தைச் சேர்ந்தவர். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அஜிதாவை, அவரது தந்தை நக்சல்பாரி இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுத்தார்.
நக்சல்பாரி இயக்கத்தில் முழு ஈடுபாடு ஏற்பட்ட பின் அஜிதா கேரளத்தில் வயநாடு பகுதிக்குச் செல்கிறார். அங்கு மலைப்பிரதேசத்தில் ஆதிவாசிகளுக்கும், நிலச்சுவான்தார்களுக்கும் கடுமையான தகராறுகள் நடந்துவந்த நேரம் அது. நிறைய ஆதிவாசிகளின் நிலங்களை நிலச்சுவான்தார்கள் வன்முறையாக எடுத்துக்கொண்டு ஆதிவாசிகளை விரட்டி விடுவது என்பது ஒரு பிரச்னையாக உருவெடுத்தது.
இது பற்றி அரசு அதிகாரிகளிடம் கேட்டால், நிறைய பட்டா நிலங்கள் வெளியூர்களில் வசிக்கும் நிலச்சுவான்தார்களால் தனிப்பட்ட முறையில் நேரடியாக நிர்வகிக்கப்படாமல் இருந்தன.
இதுபோன்ற நிலங்களில் ஆதிவாசி கிராமத்தினர் சென்று குடியமர்ந்து கொண்டு சிறிய அளவில் விவசாயம் செய்து வந்தார்கள். இது இரண்டு மூன்று தலைமுறைகளாகத் தொடர, இந்த நிலங்கள் தங்களுக்குச் சொந்தம் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அரசு ஆவணங்களில் பல நிலச்சுவான்தார்கள் பட்டாதாரர்களாகத் தொடர்ந்தார்கள்.
நிலங்களின் தேவைகளும், விலைமதிப்பும் உயர்ந்த பின்னர், நகர்ப்புறங்களில் இருந்த நிலச்சுவான்தார்கள் தங்கள் நிலங்களைத் தேடி மலைக்கிராமப் பகுதிகளுக்கு வந்து அவற்றை யாரோ ஆக்கிரமித்திருப்பதைக் கண்டு போலீஸ் உதவியுடன், உள்ளூர் ரவுடிகள், வஸ்தாதுகள் உதவியுடன், ஆதிவாசிகளைத் துரத்திவிட்டு, தங்கள் பட்டா நிலங்களை மீண்டும் கையகப்படுத்துவார்கள். வழக்கம்போல் போலீஸôர் சட்டப்படி பட்டா வைத்திருக்கும் பணக்காரர்களின் பக்கம் துணை நிற்பார்கள்.
நிலைமை இப்படி இருக்க ஆதிவாசி தலைவர்களும் நக்சல்பாரி இயக்கத்தினரும் நிலச்சுவான்தார் கையில் இருக்கும் பட்டாக்கள் உண்மையானவை அல்ல, போர்ஜரிகள் என வாதிட்டார்கள். இந்தப் பிரச்னை மிகவும் அதிகமாகி ஒரு கொரில்லா தாக்குதல்தான் சரி என ரகசியமாக நக்சல்பாரிகளின் கூட்டத்தில் பிரசாரம் தொடர்ந்தது.
கேரளத்தின் அன்றைய நம்பூதிரிப்பாட் அரசாங்கம் தலைச்சேரி எனும் இடத்தில் ஒரு பெரிய தாக்குதலைச் சமாளிக்க வேண்டியிருந்தது.
கண்ணூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பீடி கம்பெனி மிகப் பிரபலமாக வளர்ந்தது. அதில் சுமார் 20,000 பீடித் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். அவர்களுக்குக் குறைந்தபட்ச கூலி நிர்ணயம் செய்து நம்பூதிரிப்பாடின் கம்யூனிஸ்ட் அரசு ஒரு சட்டம் இயற்றியது. இந்தக் கூலி கட்டுபடியாகாது என்பதால், பீடி கம்பெனியை மூடிவிட்டு, தங்கள் சொந்த கர்நாடக மாநிலத்துக்கு அதை மாற்றிவிட்டார்கள்.
இந்த ஒரே நடவடிக்கையில் 20,000 ஏழைத் தொழிலாளர்கள் வேலையிழந்து பரிதவித்தார்கள். அவர்களைத் திரட்டி ஆயுதங்களைக் கொடுத்துப் பயிற்சி செய்து தலைச்சேரி போலீஸ் நிலையத்தைத் தாக்க முற்பட்டார்கள் நக்சலைட்டுகள்.
அஜிதா அந்தத் தாக்குதலில் பங்கெடுத்தார். ""அந்தத் தாக்குதலில் நிறைய ஆயுதங்கள் அங்கே கிடைக்கும் என்று நாங்கள் ஈடுபட்டோம். ஆனால் அந்தத் தாக்குதலில் நாங்கள் கைது செய்யப்பட்டு படுதோல்வி அடைந்தோம்'' என்கிறார் அஜிதா. அவர் ஏழரை ஆண்டுகள் சிறையில் இருந்தார்.
19 வயதே நிரம்பிய அஜிதா, போலீஸôரால் மானபங்கப்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் தன்னை நிறைய விபசார வழக்கில் கைதான பெண்களுடன் ஒரே அறையில் அடைத்து வைத்ததாகவும் கூறுகிறார். அதுமாதிரிப் பெண்கள் தாங்கள் வாழ்க்கையில் ஏழ்மையினாலும், ஆண்கள் மற்றும் போலீஸôர் பலரால் துன்புறுத்தப்பட்டு விபசாரத் தொழிலுக்கு வந்ததாகவும் கூறினார்களாம்.
இது ஒரு கேடுகெட்ட உலகம் என்பதைத் தன்னுடைய ஏழரை ஆண்டு சிறை அனுபவத்தில் முழுவதும் தெரிந்து கொண்டதாக அவர் கூறுகிறார்.
என் தந்தை எனக்குப் போதித்த சித்தாந்தங்களும், என்போன்ற சில துரதிருஷ்டமான பெண்கள் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களும் என்னைத் தீவிர போராளியாக மாற்றியது என்று கூறுகிறார் அஜிதா.
இதுபோன்ற தகவல்கள் வளர்ந்துவிட்ட மாநிலமாகிய தமிழகத்தின் குடிமக்களாகிய நமக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளை மாநில அரசு கவனிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வாழ்க்கைக் கட்டமைப்புகள் எனப்படும் சாலை வசதிகள், குடிநீர் வசதி, கல்வி, சுகாதாரம் போன்றவற்றுடன் அடிப்படை சமூகப் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.
கல்வி அறிவில்லாத பெண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், தொழிலாளர்கள் எப்படித் தங்கள் எஜமானர்களால் நடத்தப்படுகிறார்கள் என்பவையெல்லாம் அடிப்படை விஷயங்களாக மாறுகின்றன. ஏழை, பணக்காரன் வித்தியாசம் மிக அதிகமாகி காழ்ப்புணர்ச்சி வளரக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு, சோஷலிச சித்தாந்தப்படி ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக பல உயரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். காலப்போக்கில் அரசியல்வாதிகளின் ஊழல் பெருகி தாதாக்களுடனும், தனவந்தர்களுடனும் ஒரு கூட்டணி அமைத்து ஏழை மக்கள் அதிக அளவில் உருவாகித் தங்களுக்கு அரசு எதுவும் செய்யாது, போராடித்தான் நமக்கு வேண்டிய நன்மைகளை நாம் பெற முடியும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.
இதை முற்றும் உணர்ந்து, அதன் அடிப்படையில் திட்டமிடாமல், கூடுதல் போலீஸôரையும், பாதுகாப்புப் படையினரையும் அனுப்பி, ஆளில்லாத விமானங்களின் மூலம் குண்டு மழை பொழிந்து மாவோயிஸ்டுகளை அடக்கி ஒடுக்கிவிட முடியாது!
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி
Labels:
இந்தியாஅரசு,
கட்டுரை,
பாதுகாப்பு
ஊழலின் ஊற்றுக்கண்!
உலக ஊழல் ஒழிப்பு தினம் என்று ஆண்டுக்கொரு முறை ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது என்பதே அவமானகரமான விஷயம். கொலை கொள்ளை ஒழிப்பு தினம், விபசார ஒழிப்பு தினம், உண்மை பேசும் தினம் என்றெல்லாம்கூட ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது.
ஊழல் என்பது உலகளாவிய விஷயமாகிவிட்டது என்பதால் அதை அன்றாட வாழ்க்கையின் அம்சமாகவே பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. ராஜா ராணி காலத்திலிருந்து ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அதிகப்படியான சலுகைகளை அனுபவிப்பது என்பது புதிய விஷயமல்ல. அதேபோல, ஆட்சியாளர்களில் பலர் குடிமக்களின் நலனைப் பற்றியே கவலைப்படாமல் சகல சௌபாக்கியங்களுடன் ராஜபோகமாக ஊதாரி வாழ்க்கை வாழ்ந்த சரித்திரம் உலகளாவிய ஒன்று.
ஆட்சியையும் அதிகாரத்தையும் ஒரு சிலர் பரம்பரை பாத்தியதை கொண்டாடி வருவதையும், குடிமக்களின் நல்வாழ்வைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் செயல்பட்டு வருவதையும் பார்த்து மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவுதான் மன்னர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும், மக்களாட்சி மலர்ந்ததும். நியாயமாகப் பார்த்தால் மக்களாட்சியில் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஒரு சிலர் தனிச் சலுகைகள் பெறுவது போன்றவற்றுக்கே இடம் இருக்கலாகாது.
ஆட்சி முறை மாறியதே தவிர மன்னராட்சியின் தவறுகளும் குறைபாடுகளும் களையப்பட்டனவா என்று கேட்டால் உதட்டைப் பிதுக்க வேண்டி இருக்கிறது. பரம்பரை ஆட்சிக்குக்கூட மக்களாட்சியில் முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலைமை. ஜார் மற்றும் பதினெட்டாம் லூயி மன்னர்களுக்குப் பதிலாக ஹிட்லர், முசோலினி, இடி அமின் என்று சர்வாதிகாரிகளும், மக்களைப் பற்றிய கவலையே இல்லாமல் தங்களது மனம் போன போக்கில் நடந்த ஆட்சியாளர்களும் மக்களாட்சியிலும் தொடர்வதுதான் வேடிக்கை.
வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ச்சி அடையாத நாடுகள் என்கிற வேறுபாடே இல்லாமல், மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி என்றெல்லாம் வித்தியாசம் பாராமல் எங்கும் எல்லா இடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்போல லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும், தனிநபர் சலுகைகளும் பரந்து விரிந்திருப்பது மனித சமுதாயத்துக்கே களங்கமாகவும் அவமானமாகவும் தொடர்கிறது.
லஞ்ச ஊழலைப் பொறுத்தவரை ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இது படித்தவர்களின் தனிச்சொத்து என்பதுதான். கிராமங்களில் படிக்காத ஏழை விவசாயியோ, தொழிலாளியோ லஞ்சம் வாங்கவும், ஊழல் செய்யவும் வாய்ப்பே இல்லாதவர்கள். அரசு அலுவலர்களானாலும், காவல்துறையினரானாலும் அவர்கள் படித்தவர்கள். அவர்கள்தான் லஞ்சம் வாங்குகிறார்கள். அப்பாவி ஏழைகளும், படிப்பறிவில்லாதவர்களும், சாமானியர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் இந்தப் படித்த "கன'வான்களின் பேராசைக்குத் தீனி போட வேண்டிய நிர்பந்தம்.
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி ஏற்றதும் ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு, கைது செய்யப்பட்ட 365 அரசு ஊழியர்களில் 300 பேருக்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில், சுமார் 1000 அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவர்களில் சிலர் சிறைத் தண்டனையும் அனுபவித்தவர்கள். ஆனாலும் இவர்களில் ஒன்றிரண்டு கணக்கர்களும், கடைநிலை ஊழியர்களும் தவிர யாரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. வழக்குகள் தொடரப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றனவே தவிர தீர்ப்பு எழுதப்படவில்லை. இவர்களைப் பதவி நீக்கம் செய்ய மேலதிகாரிகள் தயாருமில்லை. பிகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உள்ள நிலைமை இதுதான்.
ஐம்பதுகளில் உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தாவில் தொடங்கி எத்தனை எத்தனையோ பிரதமர்களும், உள்துறை அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் ஊழலுக்கு எதிராகப் போரை அறிவித்து விளம்பரம் தேடிக் கொண்டார்களே தவிர ஊழல் ஒழியவும் இல்லை. ஊழலுக்கு எதிரான வாய் சவடால் குறையவுமில்லை.
அரசியல் தலைவர்களின் ஊழலைக்கூடப் புரிந்து கொள்ளலாம். தேர்தலுக்குச் செலவு செய்த பணத்தை லஞ்சம் வாங்கி ஈடுகட்டி, அடுத்த தேர்தல்களுக்கான பணத்தைச் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்று சமாதானம் சொல்ல முடியும். கொள்ளை அடித்துக் கொள்ளவும், லஞ்சம் வாங்கிக் கொள்ளவும் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து அனுமதி வழங்கி இருக்கிறார்கள் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.
ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள், மக்களிடமே லஞ்சம் வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? வாங்கும் சம்பளம் தங்களது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டு வேறு வேலை பார்த்துக் கொள்வதுதானே? மக்களாட்சியில் மக்களுக்காக உழைப்பதற்காக மக்களால் சம்பளம் கொடுத்து நியமிக்கப்பட்டிருக்கும் வேலைக்காரர்கள், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மக்களிடமே லஞ்சம் வாங்குவது தடுக்கப்பட்டால் ஒழிய, லஞ்சமும் ஊழலும் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகத் தொடர்வதைத் தடுக்க முடியாது.
லஞ்சமும் ஊழலும் படித்தவன் செய்யும் தவறு. "இவனெல்லாம் படித்தால் என்ன, படிக்காமல் போனால் என்ன?' என்று கேட்கத் தோன்றுகிறதா? படிக்காவிட்டால் லஞ்சம் வாங்க முடியாதே...!
நன்றி : தினமணி
ஊழல் என்பது உலகளாவிய விஷயமாகிவிட்டது என்பதால் அதை அன்றாட வாழ்க்கையின் அம்சமாகவே பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது. ராஜா ராணி காலத்திலிருந்து ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அதிகப்படியான சலுகைகளை அனுபவிப்பது என்பது புதிய விஷயமல்ல. அதேபோல, ஆட்சியாளர்களில் பலர் குடிமக்களின் நலனைப் பற்றியே கவலைப்படாமல் சகல சௌபாக்கியங்களுடன் ராஜபோகமாக ஊதாரி வாழ்க்கை வாழ்ந்த சரித்திரம் உலகளாவிய ஒன்று.
ஆட்சியையும் அதிகாரத்தையும் ஒரு சிலர் பரம்பரை பாத்தியதை கொண்டாடி வருவதையும், குடிமக்களின் நல்வாழ்வைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் ஆட்சியாளர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் செயல்பட்டு வருவதையும் பார்த்து மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவுதான் மன்னர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும், மக்களாட்சி மலர்ந்ததும். நியாயமாகப் பார்த்தால் மக்களாட்சியில் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஒரு சிலர் தனிச் சலுகைகள் பெறுவது போன்றவற்றுக்கே இடம் இருக்கலாகாது.
ஆட்சி முறை மாறியதே தவிர மன்னராட்சியின் தவறுகளும் குறைபாடுகளும் களையப்பட்டனவா என்று கேட்டால் உதட்டைப் பிதுக்க வேண்டி இருக்கிறது. பரம்பரை ஆட்சிக்குக்கூட மக்களாட்சியில் முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலைமை. ஜார் மற்றும் பதினெட்டாம் லூயி மன்னர்களுக்குப் பதிலாக ஹிட்லர், முசோலினி, இடி அமின் என்று சர்வாதிகாரிகளும், மக்களைப் பற்றிய கவலையே இல்லாமல் தங்களது மனம் போன போக்கில் நடந்த ஆட்சியாளர்களும் மக்களாட்சியிலும் தொடர்வதுதான் வேடிக்கை.
வளர்ச்சி அடைந்த நாடுகள், வளர்ச்சி அடையாத நாடுகள் என்கிற வேறுபாடே இல்லாமல், மக்களாட்சி, சர்வாதிகார ஆட்சி, ராணுவ ஆட்சி என்றெல்லாம் வித்தியாசம் பாராமல் எங்கும் எல்லா இடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்போல லஞ்சமும், ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும், தனிநபர் சலுகைகளும் பரந்து விரிந்திருப்பது மனித சமுதாயத்துக்கே களங்கமாகவும் அவமானமாகவும் தொடர்கிறது.
லஞ்ச ஊழலைப் பொறுத்தவரை ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால், இது படித்தவர்களின் தனிச்சொத்து என்பதுதான். கிராமங்களில் படிக்காத ஏழை விவசாயியோ, தொழிலாளியோ லஞ்சம் வாங்கவும், ஊழல் செய்யவும் வாய்ப்பே இல்லாதவர்கள். அரசு அலுவலர்களானாலும், காவல்துறையினரானாலும் அவர்கள் படித்தவர்கள். அவர்கள்தான் லஞ்சம் வாங்குகிறார்கள். அப்பாவி ஏழைகளும், படிப்பறிவில்லாதவர்களும், சாமானியர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் இந்தப் படித்த "கன'வான்களின் பேராசைக்குத் தீனி போட வேண்டிய நிர்பந்தம்.
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி ஏற்றதும் ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு, கைது செய்யப்பட்ட 365 அரசு ஊழியர்களில் 300 பேருக்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில், சுமார் 1000 அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. இவர்களில் சிலர் சிறைத் தண்டனையும் அனுபவித்தவர்கள். ஆனாலும் இவர்களில் ஒன்றிரண்டு கணக்கர்களும், கடைநிலை ஊழியர்களும் தவிர யாரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. வழக்குகள் தொடரப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றனவே தவிர தீர்ப்பு எழுதப்படவில்லை. இவர்களைப் பதவி நீக்கம் செய்ய மேலதிகாரிகள் தயாருமில்லை. பிகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உள்ள நிலைமை இதுதான்.
ஐம்பதுகளில் உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரிலால் நந்தாவில் தொடங்கி எத்தனை எத்தனையோ பிரதமர்களும், உள்துறை அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் ஊழலுக்கு எதிராகப் போரை அறிவித்து விளம்பரம் தேடிக் கொண்டார்களே தவிர ஊழல் ஒழியவும் இல்லை. ஊழலுக்கு எதிரான வாய் சவடால் குறையவுமில்லை.
அரசியல் தலைவர்களின் ஊழலைக்கூடப் புரிந்து கொள்ளலாம். தேர்தலுக்குச் செலவு செய்த பணத்தை லஞ்சம் வாங்கி ஈடுகட்டி, அடுத்த தேர்தல்களுக்கான பணத்தைச் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்று சமாதானம் சொல்ல முடியும். கொள்ளை அடித்துக் கொள்ளவும், லஞ்சம் வாங்கிக் கொள்ளவும் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து அனுமதி வழங்கி இருக்கிறார்கள் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.
ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அரசு அதிகாரிகள், மக்களிடமே லஞ்சம் வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? வாங்கும் சம்பளம் தங்களது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றதாக இல்லையென்றால் ராஜிநாமா செய்துவிட்டு வேறு வேலை பார்த்துக் கொள்வதுதானே? மக்களாட்சியில் மக்களுக்காக உழைப்பதற்காக மக்களால் சம்பளம் கொடுத்து நியமிக்கப்பட்டிருக்கும் வேலைக்காரர்கள், மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மக்களிடமே லஞ்சம் வாங்குவது தடுக்கப்பட்டால் ஒழிய, லஞ்சமும் ஊழலும் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகத் தொடர்வதைத் தடுக்க முடியாது.
லஞ்சமும் ஊழலும் படித்தவன் செய்யும் தவறு. "இவனெல்லாம் படித்தால் என்ன, படிக்காமல் போனால் என்ன?' என்று கேட்கத் தோன்றுகிறதா? படிக்காவிட்டால் லஞ்சம் வாங்க முடியாதே...!
நன்றி : தினமணி
Labels:
இந்தியாஅரசு,
ஊழல்,
தமிழகஅரசு,
தலையங்கம்
நாடாளுமன்றத்தில் நாவாட உதவாத செம்மொழி!
"தே மதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்' என்று ஆர்ப்பரித்தார் மகாகவி பாரதியார். ஆனால் எந்த நாட்டின் சுதந்திரத்துக்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டாரோ, அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலேயே அவர்தம் தாய்மொழியான தமிழ்மொழி ஓங்கி ஒலிக்கப்போவதில்லை என்பதை அவர் எண்ணியிருக்க மாட்டார்.
÷தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல், "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூல்வழியே 1856-ம் ஆண்டு உலகுக்குத் தெரிவித்து சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசு தமிழைச் செம்மொழி என்று அறிவித்தது. தமிழைச் செம்மொழியாக அறிவித்ததே, செம்மொழிக்கான தகுதிகளைத் தளர்த்தி வேறுசில மொழிகளையும் செம்மொழியாக அறிவிப்பதன் பொருட்டே என்பதும் பிறகுதான் விளங்கியது.
÷இது ஒருபுறம் இருக்க, தகுதி மிகுதியால் செம்மொழி என்னும் பெருமை பெற்ற தமிழ்மொழியில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகின்ற செய்தி ஊடகங்களில் அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழில் பேசுவதற்குத் தடையாக இருப்பது என்ன அல்லது யார் என்பது பலருக்கும் பெரும் புதிராகவே உள்ளது. மத்திய அமைச்சர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறதென்றால், அமைச்சர்கள் அல்லாத மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியிலும் ஆங்கிலத்திலும் பிறர் பேசுவதைப்போல் எப்போதும் எதிலும் தமிழில் பேச அனுமதிக்கப்படுகிறார்களா என்றால், இல்லை என்பதை நம்புவதற்கே பலர் தயங்குவார்கள்.
÷அவையில் ஒருவர் இந்தியில் பேசினால் அது ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் பேசினால் அது இந்தியிலும் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்பு வசதி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் கோரிக்கையால் 1964-ம் ஆண்டு முதல் செய்துதரப்பட்டு வருகிறது.
தமிழில் பேசுவதற்கு மத்திய அமைச்சருக்கு அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்குமுன், நாடாளுமன்றத்தில் எந்தெந்த மொழிகளில் பேசலாம் என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது.
÷அரசியலமைப்புச் சட்டத்தின் 120-வது பிரிவு இவ்வாறு குறிப்பிடுகிறது: ""நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும்.
ஒரு உறுப்பினரால் தம் கருத்தை இந்தி அல்லது ஆங்கிலத்தில் வெளிப்படுத்த இயலாது என்றால், மாநிலங்களவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவர் அல்லது அந்தந்த அவையை நடத்துபவர் அந்த உறுப்பினரைத் தம்முடைய தாய்மொழியில் பேச அனுமதிக்கலாம்.''
÷ஆனால் நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன? இந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் யாரும் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். தமிழிலோ அல்லது பிராந்திய மொழிகள் என்று அழைக்கப்படும் வேறு மாநில மொழிகளிலோ ஓர் உறுப்பினர் பேச வேண்டும் என்றால், அவர் பேசுவதற்குக் கொடுக்கப்படும் வாய்ப்பைவிட, அவருக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அவர் தமிழில் பேசாமல் இருப்பதே மேல் என்று எண்ணி ஒதுங்கிவிடச் செய்கிறது.
ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதிகளைப் பட்டியலிடுகின்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 84 அல்லது நாடாளுமன்றத்தில் எந்தெந்த மொழிகளில் பேசலாம் என்பதைக் குறிப்பிடும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 120 அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை மற்றும் அவர்களின் தகுதிகள் பற்றி விலாவாரியாகக் குறிப்பிடும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ஆகியவற்றில் எதுவும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் உள்ளிட்ட தம் தாய்மொழியில் பேசுவதைத் தடை செய்யவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் அல்லது இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறவில்லை.
இவ்வாறிருக்க, அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மத்திய அமைச்சர்கள் தமிழில் பேசமுடியாது என்று கூறுகிற, அரசியல் சட்டத்தை விஞ்சுகிற அதிகாரம் யாருக்கு இருக்கிறது? நிச்சயமாக எவருக்கும் இல்லை. இந்த ஜனநாயக ரீதியான மொழி உரிமை மறுக்கப்படுவதற்கான முக்கியமான காரணம், இந்திக்குத் தரப்படும் அதே உரிமையை பிராந்திய மொழிகளுக்கும் தருவதா என்னும் மனப்பாங்கைத் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்?
ஒரு மத்திய அமைச்சர் தாம் தமிழில் பேசவிரும்புவதாக நாடாளுமன்றச் செயலகத்துக்குத் தெரிவித்தது பாராட்டத்தக்க ஒரு முன்னோடியான செயல்.
த மிழகத்தைச் சேர்ந்த பிற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தங்கள் கருத்தை முன் ஆயத்தமின்றி ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும் அளவுக்கு ஆங்கிலப் புலமை பெற்றவர்களா என்ற கேள்வி எழுவதும் இயற்கைதான்.
÷தமிழர்கள் சம உரிமையின்றி வாழ்ந்துவரும் இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடாளுமன்றங்களில்கூட தமிழில் தடையின்றிப் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது.
தமிழில் பேசவும் பிற மொழிகளில் பேசப்படுவதை மொழிபெயர்ப்புமூலம் தமிழில் கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் முன்னறிவிப்பு செய்துவிட்டு ஒரு எம்.பி. தமிழில் பேசலாமே தவிர, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும்போது அதைத் தமிழில் மொழிபெயர்ப்பு மூலம் அவரால் கேட்கமுடியாது, அந்த வசதி இங்கு செய்துதரப்படவில்லை.
ஆங்கிலப் புலமை இல்லாததால் தமிழில் பேசும் ஒருவர், ஆங்கிலம் அல்லது இந்தியில் நடைபெறும் அவை நடவடிக்கைகளை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் எவ்வாறு புரிந்துகொள்வார்?
இரண்டாந்தரக் குடிமக்களாகத் தமிழர்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் நாடுகளின் நாடாளுமன்றங்களில் தமிழில் பேசுவதற்கும் பிறர் பேசுவதைத் தமிழில் கேட்பதற்கும் கொடுக்கப்படும் உரிமை, இந்திய நாடாளுமன்றத்தில் கொடுக்கப்படவில்லை என்பதை எண்ணும்போது யார் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற கேள்வி ஈட்டியாய் நெஞ்சில் குத்துகிறது.
27 நாடுகள் அங்கம் வகிக்கின்ற, 736 எம்.பி.க்களைக்கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடாளுமன்றத்தில் 23 மொழிகளில் உடனடி மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.
இதற்காக 800-க்கும் அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது வியப்புமேலிடும் உண்மை.
ஆனால் காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் இத்திருநாட்டில் சொந்தமொழியே அன்னியப்பட்டுக் கிடக்கும் அவலத்திலும் சலனமில்லாமல் இருப்பதுதான் தமிழனின் தனிப்பண்புபோலும்.
÷சொந்த நாட்டின் நாடாளுமன்றத்திலேயே மதிக்கப்படாத ஒரு மொழி செம்மொழியாய் இருந்து யாருக்கு என்ன பயன்? யாருடைய தயவும் இன்றி நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் சூழல் உருவாக வேண்டுமெனில், அரசியமைப்புச் சட்டத்தின் 120-வது பிரிவைத் திருத்துவது அவசரமானதும் அவசியமானதும்கூட. நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும் என்ற வாசகத்தை நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலம் அல்லது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மேற்கொள்ளப்படும் என்று மாற்றியமைக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
அப்போதுதான் இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் கொடுக்கப்படும் நாடாளுமன்ற கெüரவம் செம்மொழி தமிழுக்கும் கிடைக்கும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த இரு அவைகளின் எம்.பி.க்கள் 59 பேரும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிப்பார்களா?
அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட இந்த ஆண்டில், அவருடைய முய ற்சியால் கொண்டுவரப்பட்ட நாடாளுமன்ற மொழிபெயர்ப்பு சேவை முழுவீச்சில் செம்மொழி தமிழுக்குக் கிடைக்கச் செய்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.
(கட்டுரையாளர்: தில்லை நாகசாமி
மாநிலங்களவையில் முதுநிலை மொழிபெயர்ப்பாளராக 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்).
நன்றி : தினமணி
÷தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதை மொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல், "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூல்வழியே 1856-ம் ஆண்டு உலகுக்குத் தெரிவித்து சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசு தமிழைச் செம்மொழி என்று அறிவித்தது. தமிழைச் செம்மொழியாக அறிவித்ததே, செம்மொழிக்கான தகுதிகளைத் தளர்த்தி வேறுசில மொழிகளையும் செம்மொழியாக அறிவிப்பதன் பொருட்டே என்பதும் பிறகுதான் விளங்கியது.
÷இது ஒருபுறம் இருக்க, தகுதி மிகுதியால் செம்மொழி என்னும் பெருமை பெற்ற தமிழ்மொழியில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி மறுக்கப்பட்டு வருகின்ற செய்தி ஊடகங்களில் அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தமிழில் பேசுவதற்குத் தடையாக இருப்பது என்ன அல்லது யார் என்பது பலருக்கும் பெரும் புதிராகவே உள்ளது. மத்திய அமைச்சர்கள் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறதென்றால், அமைச்சர்கள் அல்லாத மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியிலும் ஆங்கிலத்திலும் பிறர் பேசுவதைப்போல் எப்போதும் எதிலும் தமிழில் பேச அனுமதிக்கப்படுகிறார்களா என்றால், இல்லை என்பதை நம்புவதற்கே பலர் தயங்குவார்கள்.
÷அவையில் ஒருவர் இந்தியில் பேசினால் அது ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் பேசினால் அது இந்தியிலும் உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்த மொழிபெயர்ப்பு வசதி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் கோரிக்கையால் 1964-ம் ஆண்டு முதல் செய்துதரப்பட்டு வருகிறது.
தமிழில் பேசுவதற்கு மத்திய அமைச்சருக்கு அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்குமுன், நாடாளுமன்றத்தில் எந்தெந்த மொழிகளில் பேசலாம் என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது.
÷அரசியலமைப்புச் சட்டத்தின் 120-வது பிரிவு இவ்வாறு குறிப்பிடுகிறது: ""நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும்.
ஒரு உறுப்பினரால் தம் கருத்தை இந்தி அல்லது ஆங்கிலத்தில் வெளிப்படுத்த இயலாது என்றால், மாநிலங்களவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவர் அல்லது அந்தந்த அவையை நடத்துபவர் அந்த உறுப்பினரைத் தம்முடைய தாய்மொழியில் பேச அனுமதிக்கலாம்.''
÷ஆனால் நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன? இந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் மற்றும் உருது ஆகிய மொழிகளில் யாரும் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். தமிழிலோ அல்லது பிராந்திய மொழிகள் என்று அழைக்கப்படும் வேறு மாநில மொழிகளிலோ ஓர் உறுப்பினர் பேச வேண்டும் என்றால், அவர் பேசுவதற்குக் கொடுக்கப்படும் வாய்ப்பைவிட, அவருக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் அவர் தமிழில் பேசாமல் இருப்பதே மேல் என்று எண்ணி ஒதுங்கிவிடச் செய்கிறது.
ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராவதற்கான தகுதிகளைப் பட்டியலிடுகின்ற அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 84 அல்லது நாடாளுமன்றத்தில் எந்தெந்த மொழிகளில் பேசலாம் என்பதைக் குறிப்பிடும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 120 அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை மற்றும் அவர்களின் தகுதிகள் பற்றி விலாவாரியாகக் குறிப்பிடும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ஆகியவற்றில் எதுவும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ் உள்ளிட்ட தம் தாய்மொழியில் பேசுவதைத் தடை செய்யவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் அல்லது இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறவில்லை.
இவ்வாறிருக்க, அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மத்திய அமைச்சர்கள் தமிழில் பேசமுடியாது என்று கூறுகிற, அரசியல் சட்டத்தை விஞ்சுகிற அதிகாரம் யாருக்கு இருக்கிறது? நிச்சயமாக எவருக்கும் இல்லை. இந்த ஜனநாயக ரீதியான மொழி உரிமை மறுக்கப்படுவதற்கான முக்கியமான காரணம், இந்திக்குத் தரப்படும் அதே உரிமையை பிராந்திய மொழிகளுக்கும் தருவதா என்னும் மனப்பாங்கைத் தவிர வேறு எதுவாக இருக்கமுடியும்?
ஒரு மத்திய அமைச்சர் தாம் தமிழில் பேசவிரும்புவதாக நாடாளுமன்றச் செயலகத்துக்குத் தெரிவித்தது பாராட்டத்தக்க ஒரு முன்னோடியான செயல்.
த மிழகத்தைச் சேர்ந்த பிற அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருமே தங்கள் கருத்தை முன் ஆயத்தமின்றி ஆங்கிலத்தில் வெளிப்படுத்தும் அளவுக்கு ஆங்கிலப் புலமை பெற்றவர்களா என்ற கேள்வி எழுவதும் இயற்கைதான்.
÷தமிழர்கள் சம உரிமையின்றி வாழ்ந்துவரும் இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடாளுமன்றங்களில்கூட தமிழில் தடையின்றிப் பேச வாய்ப்பளிக்கப்படுகிறது.
தமிழில் பேசவும் பிற மொழிகளில் பேசப்படுவதை மொழிபெயர்ப்புமூலம் தமிழில் கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் முன்னறிவிப்பு செய்துவிட்டு ஒரு எம்.பி. தமிழில் பேசலாமே தவிர, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசும்போது அதைத் தமிழில் மொழிபெயர்ப்பு மூலம் அவரால் கேட்கமுடியாது, அந்த வசதி இங்கு செய்துதரப்படவில்லை.
ஆங்கிலப் புலமை இல்லாததால் தமிழில் பேசும் ஒருவர், ஆங்கிலம் அல்லது இந்தியில் நடைபெறும் அவை நடவடிக்கைகளை தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாமல் எவ்வாறு புரிந்துகொள்வார்?
இரண்டாந்தரக் குடிமக்களாகத் தமிழர்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் நாடுகளின் நாடாளுமன்றங்களில் தமிழில் பேசுவதற்கும் பிறர் பேசுவதைத் தமிழில் கேட்பதற்கும் கொடுக்கப்படும் உரிமை, இந்திய நாடாளுமன்றத்தில் கொடுக்கப்படவில்லை என்பதை எண்ணும்போது யார் இரண்டாந்தரக் குடிமக்கள் என்ற கேள்வி ஈட்டியாய் நெஞ்சில் குத்துகிறது.
27 நாடுகள் அங்கம் வகிக்கின்ற, 736 எம்.பி.க்களைக்கொண்ட ஐரோப்பிய கூட்டமைப்பின் நாடாளுமன்றத்தில் 23 மொழிகளில் உடனடி மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.
இதற்காக 800-க்கும் அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது வியப்புமேலிடும் உண்மை.
ஆனால் காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் இத்திருநாட்டில் சொந்தமொழியே அன்னியப்பட்டுக் கிடக்கும் அவலத்திலும் சலனமில்லாமல் இருப்பதுதான் தமிழனின் தனிப்பண்புபோலும்.
÷சொந்த நாட்டின் நாடாளுமன்றத்திலேயே மதிக்கப்படாத ஒரு மொழி செம்மொழியாய் இருந்து யாருக்கு என்ன பயன்? யாருடைய தயவும் இன்றி நாடாளுமன்றத்தில் தமிழில் பேசும் சூழல் உருவாக வேண்டுமெனில், அரசியமைப்புச் சட்டத்தின் 120-வது பிரிவைத் திருத்துவது அவசரமானதும் அவசியமானதும்கூட. நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மேற்கொள்ளப்படும் என்ற வாசகத்தை நாடாளுமன்ற நடவடிக்கைகள் இந்தி அல்லது ஆங்கிலம் அல்லது தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மேற்கொள்ளப்படும் என்று மாற்றியமைக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.
அப்போதுதான் இந்திக்கும் ஆங்கிலத்துக்கும் கொடுக்கப்படும் நாடாளுமன்ற கெüரவம் செம்மொழி தமிழுக்கும் கிடைக்கும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த இரு அவைகளின் எம்.பி.க்கள் 59 பேரும், அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர முயற்சிப்பார்களா?
அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட இந்த ஆண்டில், அவருடைய முய ற்சியால் கொண்டுவரப்பட்ட நாடாளுமன்ற மொழிபெயர்ப்பு சேவை முழுவீச்சில் செம்மொழி தமிழுக்குக் கிடைக்கச் செய்வதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையும்.
(கட்டுரையாளர்: தில்லை நாகசாமி
மாநிலங்களவையில் முதுநிலை மொழிபெயர்ப்பாளராக 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்).
நன்றி : தினமணி
Labels:
இந்தியாஅரசு,
கட்டுரை
Subscribe to:
Posts (Atom)
