Monday, December 29, 2008

பங்கு சந்தை சரிவால் 10 பிரபல நிறுவனங்கள் ஒரு வாரத்தில் இழந்தது ரூ.61,000 கோடி

இந்திய பங்கு சந்தையில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட சரிவால், 10 பிரபல நிறுவனங்கள் ரூ.61,000 கோடி வரை சந்தை மூலதனத்தை இழந்திருக்கின்றன. 6 பொதுத்துறை நிறுவனங்களும் 4 தனியார் நிறுவனங்களும் மொத்தமாக போன வாரத்தில் இழந்த சந்தை மூலதனம் ரூ. 60,872 கோடி. இந்தியாவின் மதிப்புமிக்க கம்பெனி என்று பெயர் பெற்றுள்ள ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸின் சந்தை மூலதனம் மட்டும் ரூ.21,600 கோடி குறைந்து ரூ.2,00,000 கோடிக்கும் கீழே சென்று விட்டது. கடந்த வெள்ளி அன்று முடிந்த பங்கு சந்தையுடன் கணக்கிட்டால், இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் என்று சொல்லப்படும் நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.11,02,154 கோடியில் இருந்து ரூ.10,41,283 கோடியாக குறைந்திருக்கிறது.முகேஷ் அம்பானியின் நிறுவன மதிப்பு ரூ. 2,12,345 கோடியில் இருந்து ரூ.1,90,745 கோடியாக குறைந்திருக்கிறது.இந்த சரிவிலிருந்து தப்பியது பொதுத்துறை நிறுவனமான எம்.எம்.டி.சி., என்ற சுரங்க நிறுவனம் மட்டுமே. அதன் சந்தை மூலதனம் ரூ.8,278 கோடி உயர்ந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


புதுவருடத்தில் இருந்து விமான கட்டணம் குறைகிறது

விமான பயணிகளுக்கு புத்தாண்டிற்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை இந்திய விமான நிறுவனங்கள் வெளியிட்டிருக்கின்றன.உள்நாட்டு விமான கட்டணம் குறைகிறது என்பதுதான் அந்த மகிழ்ச்சியான செய்தி. கிங் ஃபிஷர் என்ற தனியார் விமான நிறுவனமும் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவும் விமான கட்டணத்தை, வரும் ஜனவரியில் இருந்து குறைப்பதாக இப்போது அறிவித்திருக்கின்றன. விமானங்களில் பயன்படுத்தும் விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் இவர்கள் விமான கட்டணத்தை குறைப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் சேர்மன் விஜய் மல்லையா வெளியிட்ட அறிக்கையில், விமான எரிபொருளுக்கான விலை குறைந்திருப்பதால் விமான கட்டணத்தை குறைப்பதாக தெரிவித்திருக்கிறார். விமான எரிபொருள் ( ஏ.டி.எஃப் ) விலை குறைந்திருப்பதால், எங்கள் கம்பெனி பங்கு மதிப்பும் உயர்ந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பரில் இருந்து இப்போது வரை, டில்லியில் ஏ.டி.எஃப்.,விலை 45.2 சதவீதமும், சென்னையில் 44.37 சதவீதமும் குறைந்திருக்கிறது. இதுவரை மற்ற விமான கம்பெனிகள் விமான கட்டண குறைப்பு பற்றி எதுவும் சொல்லாத நிலையில் கிங்ஃபிஷர் மற்றும் ஏர் இந்தியா மட்டுமே கட்டணத்தை ஜனவரியில் இருந்து குறைப்பதாக தெரிவித்திருக்கின்றன. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி முதல் வாரத்தில் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், ஜனவரி மத்தியில் இருந்து கட்டண குறைப்பு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


Sunday, December 28, 2008

ஆயத்த ஆடை ஏற்றுமதி 'டல்'

நகை ஏற்றுமதி தொழிலாளர்களை தொடர்ந்து, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலில் உள்ள இரண்டு லட்சம் பேர் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வைரம் உட்பட அரிய வகை கற்கள், நகைகள் போன்றவற்றின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப் பட்டதை அடுத்து, அந்த தொழிலில் ஈடுபட் டிருந்த ஒன்றரை லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோனது. இந்த ஆபத்து, இப்போது ஆயத்த ஆடைகளுக்கும் ஏற்பட்டு வருகிறது. சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் , ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த தொழிலில் உள்ள பல லட்சம் தொழிலாளர்கள் பிழைப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு தான் அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்கள் இறக்குமதி அளவை குறைத்துக்கொண்டதை அடுத்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, இந்திய ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜனவரி மாதம் முதல், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. இதனால், பல நகரங்களில் செயல்பட்டுவந்த ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் திருப்பூர், சென்னை மற்றும் பெங்களூரு, ஜெய்ப்பூர், பிவாண்டி ஆகிய நகரங் களில் 70 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஒன்றே கால் லட்சம் தொழிலாளர்கள் வேலை பறிபோகும் நிலை ஏற்படும் என்று அஞ்சுகிறோம்.
கடந்த ஜனவரி-செப்டம்பர் மாதங்கள் இடையே ஒன்பதாயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி நடந் துள்ளது; இதன் பின், நவம்பரில் 30 சதவீதம் ஏற்றுமதி சரிந்து விட்டது. இந்தாண்டு இறுதிக்குள் 50 சதவீதம் குறையும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜவுளித்துறை மட்டும் 4 சதவீதத்தை நிரப்பி வருகிறது. இப்போது இதில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிகிறது. இவ்வாறு கூட்டமைப்பு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. இந்தாண்டு 36 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியை செய்ய வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள நிலையில், அதற்கு நெருங்கவே வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி விட்டது.
நன்றி : தினமலர்


நிலையற்று தள்ளாடுகிறது பங்குச் சந்தை

வியாழனன்று சந்தைக்கு விடுமுறை. வெள்ளி துவக்கம் நன்றாக இருந்தாலும், போகப் போக சந்தையில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. காலையில் சிறிது மேலேயே இருந்த சந்தை, போகப் போக சிறிது கீழே இறங்க ஆரம்பித்தது. வரும் காலங்களில், கம்பெனிகளின் ஆண்டு முடிவுகள் எதிர்பார்த்தது போல இருக்காது என்ற செய்திகளும், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் ஏற் பட்டிருக்கும் போர் மேகமும், சந்தையை கடைசி அரை மணி நேரத்தில் கீழே இழுத்துத் தள்ளியது.
பணவீக்கம் இந்த வாரம் 6.61 சதவீதமாக இருந்தது. இது, சென்ற வார அளவை விட சிறிது தான் குறைவு. இன்னும் குறையும் என்ற எதிர்பார்ப்புகள் இருந்தாலும், இறுதியாக வெள்ளியன்று மும்பை பங்குச் சந்தை 223 புள்ளிகள் குறைந்து 9,328 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 59 புள்ளிகள் குறைந்து 2,857 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. இந்த வாரம் மட்டும் சந்தை 770 புள்ளிகளை இழந்திருக்கிறது.
அட்வான்ஸ் டேக்ஸ்: சென்ற ஆண்டு டிசம்பர் காலாண்டை விட, இந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் அட்வான்ஸ் டேக்ஸ் 22 சதவீதம் குறைவாகக் கட்டப் பட்டிருக்கிறது. இந்த ஆண்டு கம்பெனிகளின் வருமானம் குறைவாக இருக்கும் என்று இது உணர்த்துகிறது. இது, ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம்.
உலகளவில் பங்குச் சந்தை இந்த ஆண்டு கூடியுள்ளதா என்ற கேள்வி பலரது மனதில் வந்திருக்கும். இந்தியாவில் 55 சதவீதம் சந்தை கீழே விழுந்திருக்கிறது. உலகிலேயே அதிகம் கீழே விழுந்த சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. அதே சமயம், ஈரான் நாட்டின் பங்குச் சந்தை (மிகவும் சிறிய சந்தை) நஷ்டமில்லாமல் இந்த ஆண்டை முடிக்கவுள்ளது; சிறிது லாபமும் சம்பாதித்துள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் கம்பெனி, குஜராத்தின் ஜாம் நகரில் தனது உற்பத்தியை துவக்கி விட்டது. 25,000 கோடி ரூபாய் செலவில் துவங்கப் பட்டுள்ள இந்த ரிபைனரி, உலகின் ஆறாவது பெரிய ரிபைனரி. இது, இந்தியாவின் ரிபைனரி அளவை இன்னும் 20 சதவீதம் கூட்டும்.
இந்த தொழிற்சாலையின் மூலம் ஒரு நாளைக்கு 5,80,000 பேரல் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்ய முடியும். ரிலையன்ஸ் இண்டஸ்டீரிசின் முதல் ரிபைனரி இங்கே உள்ளது.
அது 6,60,000 பேரல்கள் சுத்தகரிப்பு செய்யும். இரண்டும் சேர்த்தால், ஒரு நாளைக்கு சுத்திகரிப்பு செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு, உலகிலேயே அதிகமாக ஒரே இடத் தில் சுத்திகரிப்பு செய்யப்படும் அளவு. இதனால், ரிலையன்ஸ் பெட்ரோலியம் கம்பெனியின் பங்குகள் மேலே சென்றன.
சந்தையில் எந்த பங்கு வெளியீடும் இருக்காத நிலையில், போர்டிஸ் ஹாஸ்பிட்டல் தனது உரிமை பங்கு வெளியீட்டை 1,000 கோடி ரூபாய் அளவில் கொண்டு வரவுள்ளது.
இதை, புதிய ஹாஸ் பிட்டல்கள் கட்டவும், பழைய கடன்களை திருப்பிச் செலுத்தவும் உபயோகப்படுத்தப் போகின்றனர். 75 சதவீத பங்குகள் கம்பெனியின் பெரிய முதலீட்டாளர்களிடமே இருப்பதால், இந்த உரிமைப் பங்கு வெளியீடு எளிதாகச் செலுத்தப் பட்டு விடும் என்பதில் ஐயமில்லை என்று நினைக்கின்றனர்.
மேலும், அப்பல்லோவிற்கு போட்டியாக உள்ள பெரிய அளவு ஹாஸ்பிட்டல்களில் இதுவும் ஒன்று.
அடுத்த வாரம் எப்படி இருக்கும்? சந்தை அல்லாடிக் கொண்டிருப்பது உண்மை. சந்தையில் பணம் போட்டவர்களும் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். உலகளவு அல்லது உள் நாட்டு அளவு என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக சந்தை மிகவும் ஏற்ற, இறக்கமாக இருக்கிறது. நிலைமைகள் சரியாக நீண்ட நாட்கள் ஆகும்; அதுவரை பொறுமையாக இருப்பேன் என்பவர்களுக்கு இந்த சந்தை ஏற்றதாக இருக்கும்.
-சேதூராமன் சாத்தப்பன்-
நன்றி : தினமலர்


வேலை பறிப்பு இருக்காது-சம்பள உயர்வும் இருக்காது

இந்தியாவில் சாப்ட்வேர் உட்பட எக்கச்சக்க சம்பளம் தந்து வந்த பல்வேறு தனியார் நிறு வனங்களில், நிதி நெருக்கடி காரணமாக, வேலை நீக்கம் இருக் காது; ஆனால், அடுத்த ஆண்டு சம்பள உயர்வு முடக்கப்படும்! சர்வதேச நிதி நெருக்கடியால், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என்று பலதுறை நிறுவனங்கள் தவிக்கின்றன.
இதனால், இந்த நிறுவனங்களின் பணிகளை செய்து வரும் இந்திய சாப்ட்வேர் உட்பட பல் வேறு நிறுவனங்களுக்கு வரு வாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பல சாப்ட்வேர் நிறுவனங் களுக்கு, வெளிநாட்டு நிறுவனங் கள் அளித்துவந்த 'ப்ராஜக்ட்'கள் பறிபோய் வருகின்றன; அதுபோல, பல கால் சென்டர் களுக்கு பணிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முடக்கி வைத் துள்ளன.
இதனால், இந்திய நிறுவனங் களில் ஆட்குறைப்பு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட் டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடந்து வருகிறது. ஆனால், இந்திய நிறுவனங்களில் இந்த அளவுக்கு ஆட்குறைப்பு இல்லை. ஆனால், சம்பள உயர்வை குறைக்கவோ, முடக்கி வைக் கவோ முடிவு செய்ய பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, சர்வதேச சர்வே நிறுவனம்,'மெர்சர்' சமீபத்தில் சர்வே நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்கள்: இந்திய நிறுவனங்களில் ஐந்தில் ஒரு கம்பெனி வீதம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நடுத்தர அளவில் வர்த்தகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஊழியர் களை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்க தயா ரில்லை. ஆனால், அடுத்தாண்டுக் கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளன. வெளிநாட்டு உதவியுடன் நடக்கும் பல நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த நிறுவனங்களில் தான் ஆட்குறைப்பு இருக்கலாம்; ஆனால், அங்கும் முடிந்த அளவுக்கு ஊழியர்களை தக்க வைக்க முயற்சி நடந்து வருகிறது.
இந்தியாவில் 80 சதவீத சாப்ட்வேர் நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களின் ப்ராஜக்ட்கள் வராததால், இந்த நிறுவனங்கள் வருவாய் குறைந் துள்ளது.
முன்னணி நிறுவனங்களில் 83 சதவீத நிறுவனங்கள், தங்கள் வருவாய் இந்தாண்டு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே இருக்கும் என்று நினைக்கின்றன.
திறமைக்குறைவான ஊழியர் களை தக்க வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவர்களுக்கு வேறு பணிகள் அளிக்கப்படலாம். அப்படியும் முடியாதவர்களை மட்டும் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்படுகிறது. இவ்வாறு சர்வேயில் தெரியவந்துள்ளது.
நன்றி : தினமலர்


Friday, December 26, 2008

பணவீக்கம் மேலும் குறைந்தது

டிசம்பர் 13ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்கம் 6.61 சதவீதமாக குறைந்திருக்கிறது. மொத்த விற்பனை விலை அட்டவணை அடிப்படையில் கணக்கிடப்படும் இந்தியாவின் பணவீக்க விகிதம், அதற்கு முந்தின வாரத்தில் 6.84 சதவீதமாக இருந்தது. உற்பத்தி பொருட்களுக்கான வரியை மத்திய அரசு சமீபத்தில் குறைத்தது. அதன் காரணமாக பணவீக்கம் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பணவீக்கம் 6.57 சதவீதமாக இருக்கும் என்ற ராய்ட்டர் செய்தி நிறுவனத்தின் கணிப்பை பொய்யாக்கும் விதமாக அதைவிட சிறிது அதிகரித்திருக்கிறது. கடந்த வருடத்தில் இதே காலகட்டத்தில் பணவீக்கம் 3.84 சதவீதமாகத்தான் இருந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


2008ல் மியூச்சுவல் பணட் நிறுவனங்கள் இழந்தது ரூ.1,50,000 கோடி

மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்தவர்களுக்கு லாபமோ நஷ்டமோ மாறி மாறி வரத்தான் செய்யும் என்பது வேறு விஷயம். ஆனால் 2008 ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், முன் எப்போதும் இல்லாத அளவாக ரூ.1,50,000 கோடியை ( அல்லது மொத்த முதலீட்டில் மூன்றில் ஒரு பகுதியை ) இழந்திருக்கின்றன. மியூச்சுவல் பண்ட் திட்டம் முதன் முதலில் அமெரிக்காவில் தான் துவங்கப்பட்டிருக்கிறது. அங்குள்ள மாஸாசூசட்ஸ் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் 1925 ம் வருடம் ஆரம்பித்தது தான் முதல் மியூச்சுவல் பண்ட் என்கிறார்கள். இந்தியாவை பொருத்தவரை இப்போது 36 நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட் தொழிலில் இருக்கின்றன. மியூச்சுவல் பண்ட்டிற்கு 2007 ம் வருடம் ஒரு நல்ல வருடமாக இருந்திருக்கிறது. அந்த வருடத்தில் மட்டும் ரூ.2,30,000 கோடி அதில் புதுதாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதையும் சேர்த்து அந்த வருடத்தில் மொத்தம் ரூ.5,50,000 கோடி முதலீடாக இருந்தது. ஆனால் 2008 ம் வருடம் மியூச்சுவல் பண்ட்க்கு ஒரு மோசமான வருடமாக இருக்கிறது. இந்த வருடம் மட்டும் மியூச்சுவல் பண்ட்டில் ரூ.1,50,000 கோடி முதலீடு குறைந்திருக்கிறது. 2007ல் ரூ.5,50,000 கோடியாக இருந்த அது, இப்போது ரூ.4,00,000 கோடியாக குறைந்திருக்கிறது. மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களோ, 2009ல் எல்லாம் சரியாகி விடும் என்றும், மீண்டும் மக்கள் மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்ய வருவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்