Friday, August 21, 2009

இந்திய ரோடுகளில் விரைவில் ஏராளமான பவர் பைக்குகள் : ஒரு ரிப்போர்ட்

இந்தியாவில் பவர் பைக்குகள் வாங்குவதில் வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ள மோகத்தை தொடர்ந்து, புதிய மாடல் பவர் பைக்குகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய முன்னணி நிறுவனங்கள் போட்டா போட்டிக் கொண்டு களமிற‌ங்கியுள்ளன. சர்வதேச அளவில் டூவீர் உற்பத்தியில் ஜாம்பவான்களாக விளங்கும் யமஹா, சுசூகி, கே.டி.எம்., கவாசாக்கி ஆகிய நிறுவனங்கள் பவர் பைக்குளின் புதிய மாடல்களை த‌யாரிப்பதில் முணைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இம்மாதிரியான பைக்குகளின் விலை 10 முதல் 12 லட்சம் ரூபாயாக இருந்தால் கூட வாடிக்கையாளர்கள் வாங்க தயாராக தான் இருப்ப‌தாக பவர் பைக் மார்கெட் அனாலிசிஸ் தெரிவிக்கின்றன. பவர் பைக்குகள் உற்பத்தி குறித்து பேட்டியளித்த சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா துணை தலைவர் ( மார்கெட்டிங் - சேல்ஸ்) அடுல் குப்தா , பவர் பைக்குகளுக்கு நிலவும் தேவையை பூர்த்தி செய்வதே எங்கள் லட்சியம் என்றார். மேலும் தங்கள் நிறுவனத்தின் ஜி.எக்ஸ்.ஆர்., (ஜிக்ஸர்) மாடல் பவர்பைக் டிசம்பர் மாத இறுதிக்குள் லாஞ்ச் செய்யப்படும் என்றார். இதன் விலை தற்போது மார்க்கெட்டில் உள்ள அதிவேகமான பைக்குகள் ஹயாபுசா மற்றும் இன்டரூடருக்கு நிகராக 12.5 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. யமஹா நிறுவனமும் தனது பிரசித்த பெற்ற அடுத்த ஜெனரேஷனுக்கான ஒய்.ஏசட்.எப். ஆர் 1(2009 மாடலை) விரைவில் அறிமுகப்படுத்தயிருப்பதாக தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர்


No comments: