Friday, August 21, 2009

ஈஸி இன்ஸ்டால்மன்டில் கிராமப்புற மக்களுக்கு செல் போன்கள் வழங்க நோக்கியா திட்டம்

ஈஸி இன்ஸ்டால்மன்டில் கிராமப்புற மக்களுக்கு செல் போன்கள் வழங்க நோக்கியா திட்டமிட்டுள்ளது. அதுவும் வார தவணை முறையில் செல்போன் விற்க நோக்கியா திட்டமிட்டுள்ளது. நோக்கியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிராமப்புறங்களில் இப்போது செல்போனுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்தியாவில், 12 மாநிலங்களில் ஏழை மக்களுக்காக வார தவணை முறையில் செல்போன்களை விற்க திட்டமிட்டுள்ளோம் என கூறினார். வாரம் ரூ.100 வீதம் 25 வாரங்களில் விலையை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக சிறுகடன் வழங்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக கூறினார். முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 2000க்கும் மேற்பட்ட கிராமங்களில் செல்போன் வழங்கும் திடடம் அமல் படுத்தப்பட்டது. அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்து குவிந்தன. திட்டத்துக்கு கிடைத்த வெற்றியின் அடிப்படையில், மற்ற மாநிலங்களிலும் இதை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்


No comments: