Friday, April 17, 2009

செலவோ அதிகம் ; வரவோ குறைவு : இந்தியாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டு விமான கம்பெனிகள்

சமீப காலமாக இந்தியாவில் விமானங்களை இயக்க ஆகும் செலவு அதிகமாகிறது. ஆனால் வருமானமோ மிக குறைவாகத்தான் வருகிறது என்று பல முன்னணி சர்வதேச விமான கம்பெனிகள் அவர்களது இந்திய சேவையை நிறுத்திக்கொண்டன. அல்லது குறைத்துக்கொண்டன. இந்தியாவில் விமானங்களை இயக்கும் போது குறைந்த அளவே மார்ஜின் ( லாபம் ) கிடைக்கிறது என்று பிரபல சர்வதேச விமான கம்பெனிகளான விர்ஜின் அட்லாண்டிக், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஆஸ்டிரியன் ஏர்லைன்ஸ், டெல்டா, கே எல் எம், சிரியன் ஏர்லைன்ஸ், ஏரோஃபிளோட், ஆல் நிப்பான் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லூப்தான்ஸா, மற்றும் ஃபின்ஏர் ஆகியவை கடந்த ஆறு மாதங்களில் 100 க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ்களை கேன்சல் செய்திருக்கிறது. சர்வதேச அளவில் ஏர்போர்ட் கட்டணம் குறைவாக இருக்கும்போது இந்தியாவில் மட்டும் அதிகமாக இருப்பது, சர்வதேச அளவிலும் இந்தியாவிலும், விமானங்களுக்கான எரிபொருள் விலையில் அதிக வித்தியாசம் இருப்பது, டிக்கெட்களை விற்க மாட்டோம் என்று அடிக்கடி டிராவல் ஏஜென்ட்கள் மிரட்டுவது, பயணிகளின் எண்ணிக்கையில் 20 சதவீதம் வரை குறைந்திருப்பது போன்ற காரணங்களால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்து விடுகிறார்கள். மற்ற நாடுகளில் விமான கம்பெனிகளுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை மார்ஜின் ( லாபம் ) கிடைத்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் மட்டும் அவர்களுக்கு சிங்கிள் டிஜிட்டில் மட்டுமே மார்ஜின் கிடைக்கிறது. இதனால் இந்திய பயணிகளை அதிக அளவில் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு ஏற்றிச் செல்லும் ஐரோப்பிய விமான கம்பெனிகள் அதிகமாக நஷ்டமடைகின்றன என்கிறது சென்டர் ஃபார் ஏசியா பசிபிக் ஏவியேஷன் என்ற அமைப்பு. இந்தியாவில் எங்களுக்கு குறைந்த அளவே மார்ஜின் கிடைப்பதால் எங்களால் இங்கு விமான சேவையை தொடர முடியவில்லை என்கிறார் கே எல் எம் நிறுவனத்தின் ஏசியா பசிபிக் துறையின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் மார்னிக் புருட்டமா. எல்லா நாடுகளிலும் விமான நிலைய கட்டணத்தை குறைத்துக்கொண்டிருக் கிறார்கள். சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் கொரியா வில் சமீபத்தில் விமான நிலைய கட்டணத்தை 10 முதல் 50 சதவீதம் வரை குறைந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில், கடந்த சில மாதங்களில் கட்டணத்தை 9 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறார்கள் என்கிறார் அவர். விமான நிலைய கட்டணம் அதிகம் என்பதால், கே எல் எம் நிறுவனம், ஐதராபாத்தில் இருந்து இயக்கிக்கொண்டிருந்த விமான சேவையை நிறுத்திக்கொண்டது. அதன் பார்ட்னர் நிறுவனமான ஏர் பிரான்ஸ் சென்னையில் இருந்து விலகிக்கொண்டது. இந்தியாவுக்கு 55 விமானங்களை இயக்கிக்கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதை 45 ஆக குறைத்துக்கொண்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: