Wednesday, April 1, 2009

இன்றும் உயர்ந்திருந்த பங்கு சந்தை

பங்கு சந்தையில் இன்று, பெரும்பாலான நேரங்களில் குறியீட்டு எண்கள் அவ்வளவாக உயராமலும் குறையாமலும் இருந்த நிலை மாறி, கடைசி ஒரு மணி நேர வர்த்தகத்தின் போது பங்குகளை வாங்கும் போக்கு அதிகமாக காணப்பட்டதால், சந்தை வேகமாக முன்னேறியது. சென்செக்ஸ் 9,900 புள்ளிகளுக்கு மேலும், நிப்டி 3,050 புள்ளிகளுக்கு மேலும் சென்று முடிந்திருக்கிறது. மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 193.49 புள்ளிகள் உயர்ந்து 9,901.99 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 39.40 புள்ளிகள் உயர்ந்து 3,060.35 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. ஆயில் அண்ட் கேஸ் உற்பத்தி, டெக்னாலஜி, பேங்கிங், ரியல் எஸ்டேட், தனியார் மின் உற்பத்தி நிறுவன பங்குகள் இன்று அதிகம் வாங்கப்பட்டன. இருந்தாலும் பார்தி ஏர்டெல், பெல், பவர் கிரிட், என்.டி.பி.சி.,சன் பார்மா, ஹெச்.யு.எல், ஐடிசி, ஹீரோ ஹோண்டா, ஸ்டெர்லைட் பங்குகள் குறைந்திருந்தன. ஆசிய சந்தைகளில் இன்று முன்னேற்றம் இருந்தபோதிலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகள் சரிவில்தான் இருந்தன.
நன்றி : தினமலர்


No comments: