Wednesday, April 1, 2009

பொதுத்துறை வங்கிகளில் ரூ.17,000 கோடியை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டம்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்ற பெரிய வங்கிகள் உள்பட 18 பொதுத்துறை வங்கிகளில் 2009 - 10 நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.17,000 கோடி வரை முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. பெயர் சொல்ல விரும்பாத மத்திய நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். பொதுத்துறை வங்கிகளின் முதலீட்டை பெருக்கும் நடவடிக்கையாக சுமார் ரூ.16,000 கோடியில் இருந்து ரூ.17,000 கோடி வரை முதலீடு செய்து அந்த வங்கிகளின் பங்குகளை வாங்கிக்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் மட்டும் ரூ.600 கோடியில் இருந்து ரூ.700 கோடி வரை முதலீடு செய்யப்படும் என்றும், தேர்தலுக்குப்பின் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டுக்குப்பின்,மத்திய அரசு இது குறித்த முறையான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

நன்றி : தினமலர்


No comments: