Saturday, March 28, 2009

டாடா குழுமத்தின் முக்கிய மூன்று அதிகாரிகள் விரைவில் மாற்றம்

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களில் மேலாண் இயக்குனர்கள் விரைவில் மாற்றப்பட இருக்கிறார்கள். சமீப காலமாக இந்த மூன்று பேரும் தான் டாடா குழுமத்தின் முக்கிய பெரிய அதிகாரிகளாக பேசப்படுகிறார்கள். ஆனால் இந்த மூன்று பேருமே விரைவில் அவர்களுக்கு பதிலாக வரப்போகிறவர் யார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். டாடா குழுமத்தில் இந்த மூன்றும்தான் முக்கிய நிறுவனங்கள் . டாடா குழுமத்தின் மொத்த வரவு செலவில் 80 சதவீத வரவு இந்த மூன்று நிறுவனங்களில்தான் நடக்கிறது. இதிலிருந்து முதலில் வெளியேற இருப்பது டாடா மோட்டார்ஸின் மேலாண் இயக்குநர் ரவி காந்த் தான். வரும் ஜூன் மாதம் அவர் ஓய்வு பெறுகிறார். டாடா குழுமத்தில் சட்டதிட்டப்படி, எக்ஸிகூடிவ் டைரக்டர்கள் கண்டிப்பாக 65 வயதில் ஓய்வு பெற்று விட வேண்டும். இவர் தவிர டாடா ஸ்டீல் மேலாண் இயக்குனர் முத்துராமன் செப்டம்பர் மாதத்திலும், டி.சி.எஸ்.சின் மேலாண் இயக்னர் ராமதுரை அக்டோபர் மாதத்திலும் ஓய்வு பெறுகின்றனர். முக்கியமான இந்த மூன்று பேரும் ஓய்வு பெற்றாலும் டாடாவில் இருந்து முழவதுமாக வெளியேறிவிட மாட்டார்கள். அங்குள்ள ' நான்- எக்ஸிகூடிவ் 'களுக்கு ஒய்வு பெரும் வயது 75 தான் என்பதால், இவர்கள் மூன்று பேருமே அதே நிறுவனத்தில் ' நான் - எக்ஸிகூடிவ் ' ஆக பணியாற்றுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ' நான் - எக்ஸிகூடிவ் ' களுக்கான ஓய்வு பெறும் வயது கடந்த சில வருடங்களுக்கு முன் தான் 70 இலிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டு, ரத்தன் டாடா தொடர்ந்து சேர்மனாக இருந்து வருகிறார்.
நன்றி : தினமலர்


No comments: