Saturday, March 28, 2009

எஸ்.பி.ஐ.,யில் ரூ.3,000 கோடி கிரிடிட் லிமிட் கேட்கிறது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் தனியார் விமான கம்பெனியான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ரூ.1,500 கோடியில் இருந்து ரூ.3,000 கோடி வரை கிரிடிட் லிமிட் ( அதிகபட்டமாக வாங்கிக்கொள்ள அனுமதிக்கப்படும் கடன் ) கொடுக்கும் படி கேட்டிருக்கிறது. கிங்ஃபிஷர் நிறுவனத்தின் நிர்வாக செலவுக்கு பணம் தேவைப்படுவதால் கடன் தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து கிங்ஃபிஷரின் சேர்மன் விஜய் மல்லையா, கடந்த செவ்வாய் அன்று மும்பையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளதாகவும், அதற்காக , கம்பெனியின் வளர்ச்சி திட்டம் பற்றிய விபரங்கள் மற்றும் கடன் தேவைக்கான காரணம் போன்றவற்றை கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கடன் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கு ஸ்டேட் பேங்க் அதிகாரிகளும் சாதகமான பதிலையே அளித்திருப்பதாகவும், எவ்வளவு காலத்திற்கு கடன் அளிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இப்போது கடும் நிதி சிக்கலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பல நிறுவனங்களுக்கு அது பணம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் ஜனவரி மாதத்தில் அது, ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியாவுக்கு, பேங்க் கியாõரன்டி மற்றும் போஸ்ட் டேட்டட் செக் கைதான் கொடுத்ததாகவும் செல்லப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் மற்ற நிறுவனங்களைப்போலவே கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸூம் கடுமையாக நஷ்டமடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த நிதி ஆண்டில் அது அடைந்திருக்கும் நஷ்டத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதாலும், சர்வதேச விமான சேவைக்கான கட்டணம் அதிகமாக இருப்பதாலும், விமானங்களுக்கான குத்ததை பணம் அதிகமாக இருப்பதாலும், வட்டி உயர்ந்திருப்பதாலும் நஷ்டம் அதிகரிக்கிறது என்கிறது கிங்ஃபிஷர் நிறுவனம்.
நன்றி : தினமலர்


No comments: