Saturday, March 28, 2009

சத்யத்தை வாங்கும் திட்டத்தில் இருந்து விலகியது ஸ்பைஸ் குரூப்

நிதி மோசடியில் சிக்கி சீரழிந்து போயிருக்கும் சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 51 சதவீத பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து நிறைய நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. ஆனால் அதிலிருந்து சில நிறுவனங்கள் பின்னர் வேண்டாம் என்று அதிலிருந்து விலகிக்கொண்டன. இப்போது பி.கே.மோடிக்கு சொந்தமான ஸ்பைஸ் குரூப்பும் வேண்டாம் என்று விலகிக்கொண்டுள்ளது. இப்போதைக்கு நாங்கள் அதை வாங்க விரும்பவில்லை என்று ஸ்பைஸ் குரூப்பின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். கம்பெனி சட்ட வாரியத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, பங்குகளை விற்கும் நடவடிக்கைகள் வெளிப்படையாக ( டிரான்ஸ்பரன்ட் ஆக ) நடப்பதாக இருந்தால், மீண்டும் வாங்கும் முன்வருவோம் என்றார் ஸ்பைஸ் இன்னோவேட்டிவ் டெக்னாலஜிஸின் எக்ஸிகூட்டிவ் இயக்குனர் பிரீத்தி மல்ஹோத்ரா. இந்த விற்பனை, கம்பெனி சட்ட வாரியத்தின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு நடப்பதாக நாங்கள் நினைக்கவில்லை. எனவே அதன்படி நடந்தால் மட்டுமே நாங்கள் மீண்டும் அதை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றார் அவர். மேலும் இந்த விற்பனையை அவர்கள் ( மத்திய அரசு நியமித்த சத்யத்தின் போர்டு ), வெளிப்படையான ஏலம் மூலம் நடத்தியிருக்கலாம். சர்வதேச அளவில் வெளிப்படையான ஏலம் மூலம் தான் கம்பெனிகள் விற்கப்படுகின்றன. கோரஸ் கம்பெனியை டாடா, வெளிப்படையான ஏலம் மூலம் தான் வாங்கியது. அவ்வாறு விற்கும்போது நிறைய விலை கிடைக்கலாம். சந்தேகங்களும் தீரும். ஆனால் சத்யத்தில் 51 சதவீத பங்குகள் மூடப்பட்ட ஏலம் மூலம் நடக்கிறது. எனவே இதில் நாங்கள் ஆர்வம் கொள்ளவில்லை என்றார் அவர்.
நன்றி : தினமலர்


No comments: