Monday, March 9, 2009

சரிவை சந்தித்த பங்கு சந்தை

இன்று முழுவதும் பங்குகளை விற்கும் போக்கு அதிகம் காணப்பட்டதால் பங்கு சந்தை சரிவில் முடிந்தது. ஹெச்.டி.எப்.சி, எம் அண்ட் எம், மாருதி, மற்றும் பேங்கிங், பவர், டெக்னாலஜி, கேப்பிடல் குட்ஸ் பங்குகள் அதிகம் விற்கப்பட்டன. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவு நிலையும் இந்திய சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது. ஐ.டி.சி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், எஸ்.பி.ஐ.,இன்போசிஸ், எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், டி.சி.எஸ்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஓ.என்.ஜி.சி., டாடா பவர் ஆகிய நிறுவன பங்குகளின் விலை அதிகம் சரிந்திருந்தன. மும்பை பங்கு சந்தையில் இன்று முழுவதும் சரிந்திந்த குறியீட்டு எண் சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 165.42 புள்ளிகள் ( 1.99 சதவீதம் ) குறைந்து 8,160.40 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 47 புள்ளிகள் ( 1.27 சதவீதம் ) குறைந்து 2,573.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: