Monday, March 9, 2009

51 சதவீத பங்குகளை விற்பதற்கான ஏற்பாட்டை செய்ய ஆரம்பித்தது சத்யம்

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், அதனை விற்பதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்து விட்டது. அதனை வாங்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பத்தை சத்யம் எதிர்பார்க்கிறது. அதிலிருந்து ஒரு நிறுவனத்தை சத்யம் தேர்ந்தெடுக்கும். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம், அதன் 51 சதவீத பங்குகளை விற்பதற்கு சமீபத்தில் செபியிடம் அனுமதி வாங்கியது. இதற்கான விலை எதையும் அது நிர்ணயம் செய்யவில்லை என்றாலும், வாங்க விரும்புபவர்கள் மார்ச் 12 ம் தேதிக்குள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லிருக்கிறது. மேலும் சத்யத்தை வாங்க விருப்பம் செய்து பதிவு செய்திருப்பவர்கள் வரும் 20ம் தேதிக்குள் குறைந்தது ரூ.1,500 கோடி பணம் வைத்திருப்பதற்கான ஆதாரம், மற்ற விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் விபரங்கள் அடிப்படையில் ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 51 சதவீத பங்குகள் விற்கப்படும். அவர்களுக்கு 31 சதவீத பங்குகளை புதிய பங்குகளாக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கொடுக்கும். மீதம் 21 சதவீத பங்குகளை அவர்கள் வெளி சந்தையில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
நன்றி: தினமலர்


No comments: