Wednesday, March 25, 2009

சத்யம் கம்ப்யூட்டர்ஸை வாங்க விருப்பம் தெரிவித்த சிலர் வேண்டாம் என்று விலகல்

சத்யம் கம்ப்யூட்டர்ஸின் 51 சதவீத பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்து பல நிறுவனங்கள் விண்ணப்பம் செய்திருந்தன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. வந்திருக்கும் விண்ணப்பங்களை பிரித்து, அவர்கள் தகுதியானவர்கள்தானா என்று சரிபார்க்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், வாங்க விரும்பம் தெரிவித்திருந்த சில நிறுவனங்கள் இப்போது, விருப்பமில்லை என்று விலகிக்கொண்டதாக தெரிகிறது. தனியார் முதலீட்டு நிறுவனங்களான கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ், டெக்ஸாஸ் பசிபிக் குரூப், பேரிங் ஆகிய நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனமான ஹெவ்லட் பேக்கார்டும் விலகிக்கொண்டதாக தெரிகிறது. இருந்தாலும் மீதி விண்ணப்பங்களை சரி பார்க்கும் வேலைகள் நடந்து வருகின்றன. யாருக்கு சத்யத்தை கொடுக்கலாம் என்று ஏப்ரல் 15ம் தேதி அறிவித்து விடுவார்கள் என்று தெரிகிறது.ஏர்கனவே ஐகேட் என்ற அமெரிக்க நிறுவனம், சத்யத்தை வாங்க ஆர்வம் காண்பித்து, பின்னர் விண்ணப்பிக்காமல் இருந்து விட்டது. சத்யத்தின் வருமானம் குறைந்து வருவது, லாபம் மற்றும் கடன் எவ்வளவு என்பது சரியாக தெரியாத நிலை போன்ற காரணங்களால் அது வாங்க முன்வரவில்லை என்று சொல்லப்பட்டது.
நன்றி : தினமலர்


No comments: